Header Ads



"புலியை கொலை செய்யுமளவுக்கு, தமிழர்களிடம் மனிதாபிமானம் அற்றுப்போயுள்ளது"


கிளிநொச்சியில் நேற்று இளைஞர்கள் ஒன்று திரண்டு ஒரு சிறுத்தைப் புலியை அடித்து கொலை செய்து அதன்மூலம் மகிழ்ச்சியை அனுபவிக்கின்றனர். இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அணி தலைவர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

இந்த நாட்டில் இராணுவ ஆட்சியை கொண்டு வரும் அளவுக்கு என்ன தேவை உள்ளது? இன்றைய இளைஞர்கள் சுதந்திரத்தையே விரும்புகின்றனர்.

ஆனால் இராணுவ ஆட்சி, சர்வாதிகார ஆட்சி போன்ற பிரச்சாரங்கள் செய்யப்படுவதன் காரணமாக இன்றைய இளைஞர்கள் மத்தியில் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

கிளிநொச்சியில் நேற்று ஒரு புலியை அடித்து கொன்றுள்ளார்கள். அந்த புலியிடம் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டுமாயின் பல வழிமுறைகள் இருக்கின்றன.

அதை விடுத்து அந்த இளைஞர்கள் சேர்ந்து புலியை கொலை செய்யும் அளவுக்கு மனிதாபிமானம் அற்றுப்போய் உள்ளது.

இந்த நிலைக்கு இவ்வாறான பிரச்சாரங்களே காரணமாக இருக்கலாம் என சாந்த பண்டார சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

9 comments:

  1. ஒரு தகராறில் எதிர்பாராத விதமாக ஒரு சிங்களவன் இறந்துவிட்டார் என்பதற்காக ஒரு பல முஸ்லிம் கிராமங்களை அழித்து ஒரு அப்பாவி இளைஞனையும் கொண்ற காடையர்களை கண்டிக்க தைரியம் இல்லாத உன்னை போனறவர்கள் தான் மனிதாபிமானம் அற்றவர்கள் அரக்கர்கள்.

    ReplyDelete
  2. Dear Brothers do not comment without knowing the reality of the incident. May be many people got attacked by this animal and authority May have not acted on time. this might have made the people to decide protect themself this way. If after government had taken immediate action and still the youth did this ... then it can be considered .....

    When animal is killed many channels are there to talk but when many houses shops mosques burnt and people are harmed and killed in kandy incident these channels kept silent. for these channels animals are more important then human.

    ReplyDelete
  3. பெறுமதியான மணித உயிர்களை கொல்ல எத்தனிக்கும் விலங்குகளை கொல்வது மணித் தர்மமாகும்.

    ReplyDelete
  4. ஆமாம் அமைதியானதும் மனிதனுக்கு பாலை கொடுக்கின்ற பசுவை கொல்வதை விட இது எனக்க்கேதோ சரியாகத்தான் படுது.

    ReplyDelete
  5. It is being slotted for human meal not to feed dogs as u waste. Becouse of like ur peole mindset only human and word is suffering for food.

    ReplyDelete
  6. Dear Jaffnamuslim.com, pls do not display this RSS terrirst anusath's words anymore...if u need good relationship between communities

    ReplyDelete
  7. Anusath...
    முஸ்லிம்களுக்குஎதிராக எந்தக் கருத்து சொன்னாலும் அது உங்களை போன்ற இனவாதிகள் க்கு சரியாகத்தான் படும்.

    ReplyDelete
  8. கடலில் வாழும் மீன் இனங்கள் யாவும் அமைதியானதும் மனிதனுக்கும் எந்தவித ஆபத்தும் இல்லாதவைகளே. அவற்றையும் கொண்று சாப்பிடாமல் இருக்கலாமே. அதற்கு என்று ஒரு தனி அமைச்சு , அவற்றைக் பிடித்து கொல்வதற்கு பல தொழில்நுற்பங்கள்,
    மீன்கள் அதிகமாக வலையில் சிக்கி விட்டால் அதற்கு மகிழ்ச்சி ஆரவாரம் . ஏன் மீன்களுக்கு உயிர் இல்லையா? அவைக்கு வலி இல்லையா? அவைகளுக்கு பெற்றோர் என்றும் குஞ்சுகள் என்றும் உறவுகள் இல்லையா. பசுக்கு ஒரு நியதி மீன்களுக்கு ஒரு நிதியா? என்ன தருமம் இது?

    ReplyDelete
  9. ஆமாம் அனுசத் சொல்வதைப் போல் பார்த்தால் பசு பாலை எங்கோ செயற்கையாக செய்து கொண்டு வந்து கொடுப்பது போல் தெரிகிறது. அட முட்டாளே. அது அதன் இரத்தத்தை பாலாக்கி அதன் கண்றிற்கு ஊட்டுவதற்காக வைத்திருப்பதை நீர் சாமர்த்தியமாக உருவி குடிக்கிறியடா வெட்கமில்லையா உனக்கு.

    அதை விட்டு விட்டு அருகி வரும் விலங்கினத்தை அடாவடித்தனமாக கொண்று விளையாடுவது உமக்கு சரியாகப் படுதா. கழுத

    ReplyDelete

Powered by Blogger.