Header Ads



விக்னேஸ்வரனுக்கு விழுந்தது பளார் - நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு

வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சராகப் பதவி வகித்த பா.டெனீஸ்வரனை முதல்வர் விக்கினேஸ்வரன் பதவி நீக்கியது செல்லாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று -29- தீர்ப்பளித்துள்ளது.

கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம், வடக்கு மாகாண முதலமைச்சர் பதவி நீக்கியிருந்தார்.

இந்நிலையில் முதல்வர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த வழக்கின் தீர்ப்பே இன்று வழங்கப்பட்டுள்ளது.

இரு தரப்பு சமர்பணங்களுக்கும் முடிவடைந்த பின்னர், வழக்கு தீர்ப்புக்காக இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, முதல்வர் விக்கினேஸ்வரன் வட மாகாண அமைச்சர் பதவியிலிருந்து டெனீஸ்வரனை பதவி நீக்கியதை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

அவரது அமைச்சுப் பதவிகளை தற்போது வகிக்கும் அமைச்சர்களையும் தொடர்ந்து செயற்படுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தீர்ப்பின் பிரதி உடனடியாக வடக்கு மாகாண ஆளுநர், வடக்கு மாகாண முதலமைச்சருக்கு அனுப்பப்படவுள்ளது.

2

பாறுக் ஷிஹான்

வடக்கு மாகாண போக்குவரத்து மீன்பிடி அமைச்சராக தொடர்ந்தும் பா.டெனீஸ்வரனே பதவி வகிப்பார் என மேன்முறையீட்டு நீதி மன்றம்
இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
இன்றைய தினம் (29) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எடுக்கப்பட்ட குறித்த வழக்கில் வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் முன்னாள் அமைச்சர் பா.டெனிஸ்வரன் வகித்த அமைச்சு பதவியை பறித்தெடுத்தமை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது மீண்டும் பா.டெனிஸ்வரன் பதவி குறித்த பதவியை வகிக்க எந்தவித தடையும் கிடையாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த தீர்ப்பினை அடுத்து ஊடகவியலாளரிடம் கருத்து தெரிவித்த டெனிஸ்வரன் எனது முயற்சியானது அநீதிக்கெதிரானது.முதலமைச்சர் தான் தோன்றித்தனமாக எடுத்த இந்த முயற்சி தோற்கடிக்கப்பட்டுள்ளது.இதன் படி எனது மக்கள் சேவையை தொடர மீண்டும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.கடந்த காலங்களில் இன மத பேதங்களை மறந்து சேவை செய்தவன் நான்.இதனை சகலரும் அறிவர்.எதிர்வரும் 9 ஆம் திகதி ஆளுநர் பிரதம செயலாளர் முதலமைச்சர் ஆகியோருக்கு மாண்மிகு நீதிமன்றம் கட்டளை ஒன்றை பிறப்பிக்கும்.அதாவது என்னை மீண்டும் பதவியில் அமர்த்த வேண்டும் என்பதே.அத்துடன் எனது அமைச்சினை தற்போது பிடுங்கி கூறு கூறுகளாக வைத்திருக்கின்ற முதலமைச்சர் அனந்தி சசிதரன் சிவநேசன் உள்ளிட்டோர் பதவி விலகுவது நல்லது.எனக்கு இந்த நல்லாட்சியில் நீதி கிடைத்துள்ளதை இட்டு சந்தோசம் அடைகின்றேன் என கூறினார்.
இது தவிர ஊடகவியலாளரின் மற்றுமொரு கேள்வியான குறித்த பதவியில் தொடர்ந்து நீடிப்பீர்களா என கேட்ட போது பதவியேற்ற பின்னர் அதனை இராஜனாமா செய்வதை தவிர வேறு என்ன செய்வது.காரணம் இந்த முயற்சி முதலமைச்சரின் தவறை சுட்டிக்காட்டவே நான் வழக்கினை தொடர்ந்தேன்.இது மாத்திரமன்றி பழைய அமைச்சானது எனக்கு கிடைக்கப்பெறும் என்ற நம்பிக்கை வந்துள்ளது.என்னை நீக்கியவர்களுக்கு எனது அறிவுரையாக இன்னுமொரு புதிய அமைச்சை உருவாக்கி என்னை தவிர்த்து நியமித்த புதியவர்களை நியமித்துவிட்டு எனது பழைய அமைச்சினை தாருங்கள்.மக்களுக்கு என்னாலான நிறைய சேவைகளை செய்ய வேண்டி உள்ளது என தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.