Header Ads



மகிந்த - விமல் கனவுகளை தகர்க்க, மைத்திரிபால தலைமையில் கருத்தரங்கு

மகிந்த ராஜபக்சவை பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற விமல் வீரவங்ச தலைமையிலான பரப்புரைகளை எதிர்கொள்வதற்கான விசேட கருத்தரங்கு ஒன்று நடைபெறவுள்ளது. 

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெளிவுபடுத்தும் விசேட கருத்தரங்கொன்றை நடத்தத் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா திட்டமிட்டுள்ளார். 

குறித்த கருத்தரங்கு எதிர்வரும் சனி, ஞாயிறு தினங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்டுநாயக்க நட்சத்திர விடுதியில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.