Header Ads



ஸஹாபாக்களின் கருத்து வேறுபாடுகளும், கையாண்ட வழிமுறைகளும் - ரமழான் அறிவுப்போட்டி (கேள்வி 16)

நபி (ஸல்) அவர்களின் காலத்தில்  ஸஹாபாக்கள் தனிப்பட்ட பயணத்தின் போதும், போர்க்களம் சென்றபோதும் அவர்கள்; மத்தியில் கருத்து வேறுபாடுகள் தோன்றின. இருந்தும் அதற்கான தீர்வாக இஜ்திஹாதின் அடிப்படையில் அவர்கள் கண்டு  நடைமுறைப்படுத்தினார்கள்.

மதீனா வந்த பின்னால் நபி (ஸல்) அவர்களிடம்  நடந்தவைகளை கூறுவார்கள். அவற்றில் நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்த வைகளும்  உள்ளன,  திருத்திக் கொடுத்த வைகளும், அங்கீகரிக்காத அம்சங்களும் உள்ளன.

பின்வரும் சம்பவங்களைக் கவனியுங்கள்.

ஒரு படையின் தளதியாக இருந்த நபித் தோழர் தொழுகையில் இமாமாக செயல் பட்ட போது அல்பாத்திஹா சூராவை ஓதி பின்னர் மற்றொரு சூராவையும் ஓதிய பின் னால் அல்இக்லாஸ் சூராவையும் ஓதி  ரகத்துக்களை முடிப்பவராக இருந்தார். ஸஹாபாக்கள் இதைப் போர்களத்தில் பெரிதுபடுத்தவில்லை, மதீனாவை வந்த டைந்த பின்னர் அல்லாஹ்வின் தூதரிடம் அது பற்றி முறைப்பாடு செய்தார்கள், அவரிடம் ஏன் இவ்வாறு செய்தார் என விசாரிக்கும்படி நபி (ஸல்) அவர்கள் பணித் தார்கள், அதற்கு

فَقَالَ لِأَنَّهَا صِفَةُ الرَّحْمَنِ وَأَنَا أُحِبُّ أَنْ أَقْرَأَ بِهَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبِرُوهُ أَنَّ اللَّهَ يُحِبُّهُ (صحيح (البخاري ، ومسلم 
அது அர்ரஹ்மானின் பண்பாக இருக் கின்றது. அதை ஓதுவை நான் நேசிக்கின்றேன் எனக் கூறினார், அதற்காக அல்லாஹ் அவரை நிச்சயமாக நேசிப்பான் என அவரிடம் அறிவித்துவிடுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்).

நபிகள் நாயகத்தின் தோழர் ஒருவருக் குக் கிடைத்த விளக்கத்தின் அடிப்படையில் அல்இக்லாஸ் அத்தியாயத்தை அவர் தொழு கையில் மீண்டும், மீண்டும் ஓதியுள்ளார், அது மற்றவர்களுக்குத் தென்படவில்லை, அதனால்தான் அவர்கள் மத்தியில் கருத்து முரண்பாடு தோன்றக் காரணமாக இருந் துள்ளது. அதற்கு அல்லாஹ்வின் தூதரின் அங்கீகாரம் அந்த ஹாhபியின் இஜ்திஹாதைச் சரிகாண வழிகோலியுள்ளது என் பதை மேற்படி செய்தி தெரிவிக்கின்றது.

மற்றொரு சம்பவத்தைக் கவனியுங்கள். அம்மார் பின் யாஸிர், உமர் (ரழி) ஆகிய இரு நபித்தோழர்களும் ஒரு பயணம் சென்றிருந்தனர், தயம்மும் செய்யும் முறை அவ்விருவருக்கும் தெரியாது. தொழுகை நேரம் வந்ததும் உமர் (ரழி) அவர்கள் தொழ வில்லை, அம்மார் பின் யாஸிர் (ரழி) அவர் கள் தொழுதார்கள். ஷஷநீங்கள் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளாத போது தூய்மையான மண்ணை நாடுங்கள், என அல்மாயிதா அத்தியாம் ஆறாவது வசனத்தை மண்ணில் புரள்வது தயமமாக இருக்கும் என விளங்கி, அதில் புரண்டு தயம்மும் செய்து, அதன் மூலம் தொழுகையையும் நிறை வேற்றி விட்டு அல்லாஹ்வின் தூதரிடம் வந்து தனது விளக்கம் பற்றி பின்வருமாறு விபரித்தார்கள்.

وَأَمَّا أَنَا فَتَمَعَّكْتُ فِي التُّرَابِ وَصَلَّيْتُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّمَا كَانَ يَكْفِيكَ أَنْ تَضْرِبَ بِيَدَيْكَ الْأَرْضَ ثُمَّ تَنْفُخَ ثُمَّ تَمْسَحَ بِهِمَا وَجْهَكَ وَكَفَّيْكَ فَقَالَ عُمَرُ اتَّقِ اللَّهَ يَا عَمَّارُ قَالَ إِنْ شِئْتَ لَمْ أُحَدِّثْ بِهِ (صحيح مسلم)

நானோ மண்ணில் புரண்டு தொழுதேன். (முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில்:  ஒரு பிராணி மண்ணில் புரள்வது போன்று நான் புரண்டேன் என இடம்பெற்றுள்ளது). பின்பு, அல்லாஹ்வின் தூதரிடம் வந்து அது பற்றிக் கூறினேன், நீ உனது இரு கரங்களையும் இவ்வாறு மண்ணில் அடித்தால் போதும், எனக் கூறி (அடித்தார்கள்)  பின் னர், அவ்விரண்டிலும் ஊதிக்கொண்டு, உனது முகத்தையும், உனது இரு மணிக் கட்டுகளையும் தடவிக்கொள் எனக் கூறி னார்கள். (புகாரி, முஸ்லிம்).

மேற்படி செய்தி ஒரு சான்றை விளங்குவதில் ஏற்படும் குழப்பத்திற்கு தீர்வைக் கொண்ட விளக்கமாக இருக்கின்றது. எந்தப் பெரும் அறிஞருக்கும் விளக்கத்தில் தவறு ஏற்டும் என்ற நியதியை இது காட்டுகின்றது.

போரில் கலந்து கொள்வதற்காகச் சென்ற ஒரு ஸஹாபியின் தலையில் காயம் ஏற்படுகின்றது. பின்பு அவருக்கு (இஸ்கலிதமாகின்றது) குளிப்பு கடமையாகிறது, தனக்கு தயம்மும் செய்ய அனுமதி உண்டா எனக் கேட்டபோது அவ்வாறு இல்லை எனக் கூறி அவரை குளிக்கும்படி ஒரு சாரார் கட்டாயப்படுத்தினர், குளித்ததன் காரணமாக அவர் மரணித்துப் போனார், இது பற்றி நபி (ஸல்) அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டபோது அவரை இவர்கள் கொன்றது போல அல்லாஹ்வும் அவர்களைக் கொல்ல வேண்டும் என கூறிவிட்டு, இயலாதவனுக்குரிய நிவாரணி கேள்வி கேட்பதுதான் எனக் கூறியனார்கள். இது அபூதாவூத், இப்னுமாஜா போன்ற கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டிருப்பதைப் பார்க்கின்றோம்.

இங்கு இந்த சட்ட நோக்கை நபி (ஸல்) அவர்கள் சரி காணவில்லை என்பதை அறிய முடிகின்றது. மற்றொரு அறிவிப்பில் படைத் தளபதிக்கு குளிப்பு கடமையானது போது தயம்மும் செய்து அவர்களுக்காக தொழுகை நடத்தினார், அது பற்றி மக்கள் ஒவ்வொருவரும் பேசிக் கொண்டனர், நபி (ஸல்) அவர்களிடம் அவரின் செயல் பற்றி முறைப்பாடு செய்யப்பட்டபோது (அதைச் சரி காணும் முகமாக) சிரித்தார்கள் என இடம்பெற்றுள்ளது.

இந்த சான்றுகள் மூலம் நபி (ஸல்) அவர்களின் காலத்திலே அவர்கள் இல்லாத போது ஸஹாபாக்கள் மத்தியில் காணப்பட்ட கருத்து முரண்பாடுகளை களைவதற்கான வழிமுறையாக நபி (ஸல்) அவர்களின் அங்கீகாரம் பிரதான இடத்தை வகித்துள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நபியின் மரணத்தின் பின்னால் ஏற்பட்ட முரண்பாடுகளைத் தீர்த்துக் கொண்ட முறை.

நபி (ஸல்) அவர்களின் மரணத்தின் பின்  ஸஹாபாக்கள் மத்தியில் பல முரண் பாடுகள் எழுந்தன, ஆதாரத்தை விளங்கு வதில் ஏற்பட்ட குழப்பம், நேரடி சான்றுகள் இல்லாதபோது ஏறுக்கு மாறாகப் புரிதல் போன்றவை இதன் காரணிகளாக இருந் தன.

நபி (ஸல்) அவர்களின் மரணம் பற்றி அறிவுறுத்தும் வசனத்தை உமர் (ரழி) அவர்கள் சரியாககப் புரியாயததன் காரணமாகவே அல்லாஹ்வின் தூதர் மரணமா னார்கள் என்பதை ஏற்க மறுத்தார்கள், ஆனால் அபூபக்கர் (ரழி) அவர்கள் மரணத்தை உறுதி செய்தது மாத்திரமின்றி அதற்கான சான்றையும் அல்குர்ஆனில் இருந்து ஓதிக் காண்பித்தார்கள், இந்த வசனம் அப்போதுதான் இறங்கிய போன்று மதீனாவின் சந்தைகளிலும், வீதிகளிலும் மக்கள் ஓதித் திரிந்ததாக நபித்தோழர்கள் கூறுகின்றார்கள். இதன் பின்பு உமர் (ரழி) அவர்கள் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார்கள் என்ற செய்தியைப் பாரக் கின்றோம்.

அதே உமர் (ரழி) அவர்கள் தனது ஆட்சி காலத்தில் சிரியாவில் தாவூன் என்ற பிளேக்கை ஒத்த கொடிய நோய் பரவியது. அவர்கள் ஸரிக் என்ற இடத்தை அடைந்த போது அங்கு நோய் ஏற்பட்டது தெரிய வந்தது. பயணத்தைத் தொடர்வதா? அல்லது துண்டிப்பதா என்ற திண்டாட்டமான நிலையில் ஆரம்ப முஹாஜிரீன்களை அழைத்து கலந்தாலோசனை நடத்தினார்கள், அவர்களில் ஒரு சாராரின் கருத்து மற்ற சாராரின் கருத்திற்கு முரணாக இருந்தது. அன்ஸாரிகளை அழைத்து ஆலோசனை செய்தார்கள், அவர்களும் முஹாஜிர்களைப் போன்றே காணப்பட்ட னர், அவர்களது கருத்தையும் புறம் தள்ளி விட்டு குறைஷியர்களில் தலைவர்களாக உள்ள மக்கா வெற்றிக்கு முன்னர் ஹிஜ்ரத் செய்து வந்தோரை அழைத்து ஆலோசனை நடத்தினார்கள், அவர்களில் இருவர் வேறுவிதாமான கருத்தைக் கூறி இருந்தனர், இறுதியில் கலீபா அவர்கள் மக்களிடம் நாளை மதீனா திரும்பப் போவதாக அறிவித்தார்கள். படைகளின் தளபதியான அபூ உபைதா (ரழி) அவர்கள், உமர் அவர்களே! அல்லாஹ்வின் கத்ரில் இருந்தா வெருண்டோடுகின்றீர் எனக் கேட்டார்கள். அல்லாஹ்வின் ஒரு விதியில் இருந்து மற்றொரு விதியின் பக்கமாகத்தான் வெருண்டோடுகின்றேன், அபூ உபைதாவே! நீ ஒரு பள்ளத்தாக்கில் உனது ஒட்டகைகளுடன் செல்கின்றபோது அதன் ஒரு ஓரத்தில் செழிப்பும், மற்றொரு ஓரத்தில் வறட்சியும் காணப்பட்டால் எதில்தான் அதை நீ மேய்த்தாலும் அல்லாஹ்வின் விதிப்படிதானே மேய்க்கின்றாய் என பதிலளித்த கலீஃபா அவர்கள் திரும்பிச் செல்லும் வழியில் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களைச் சந்தித்தார் கள். 

فَقَالَ إِنَّ عِنْدِي فِي هَذَا عِلْمًا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِذَا سَمِعْتُمْ بِهِ بِأَرْضٍ فَلَا تَقْدَمُوا عَلَيْهِ وَإِذَا وَقَعَ بِأَرْضٍ وَأَنْتُمْ بِهَا فَلَا تَخْرُجُوا فِرَارًا مِنْهُ قَالَ فَحَمِدَ اللَّهَ عُمَرُ ثُمَّ (انْصَرَفَ (صحيح البخاري 

(இது பற்றி அறிந்த) அவர்கள் தன்னிடம் அது பற்றிய அறிவு ஞானம் இருக்கின்றது.  இவ்வாறான நோய் ஏற்பட்ட பிரதேசத்தில் வெளியில் இருப்போர் உள்ளே நுழையவும் வேண்டாம், உள்ளே இருப்பவர் அங்கிருந்து வெளியேறவும் வேண்டாம் என அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூற நான் செவிமடுத்தேன் எனக் கூறினார்கள். இதைக் கேட்டு, அல்லாஹ்வைப் புகழ்ந்த கலீபா உமர் (ரழி) அவர்கள் அங்கிருந்து திரும்பிச் சென்றார்கள் (புகாரி 5188- ஷாமிலா நூலகம்).

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் எழுதிவைக்கப்பட்ட குர்ஆன் -இன்று நம்மத்தியில் உள்ளது போன்று-நூல்வடிவில் தொகுக்கப்படாதிருந்தது. அப்புனித குர்ஆனை ஒன்று திரட்டும் பணிக்கான அடிப்படையான சிந்தனையை அபூபக்கர் (ரழி) அவர்கள் முன்வைத்த போது உமர் (ரழி) அவர்கள் ஆரம்பத்தில் அதை எதிர்த்தார்கள், பின்னர் அதைச் சரி கண்டார்கள். தனது உள்ளத்தை அல்லாஹ் அதற்காக விரிவாக்கினான் எனக் கூறி பெருமிதமும் அடைந்தார்கள். (புகாரி) என்ற செய்தி கருத்து முரண்பாடுகளின்போது ஸஹாபாக்கள் கடைப்பிடித்த ஒழுங்கு முறைகளைக் குறிப்பிடுகின்றது.

முரண்பாடுகள் எழாமல் இருப்பதில்லை, எழவே செய்யும் அதற்காக முரண்பாடுகள் தோன்றுவதை அங்கீகரிப்போர் சான்றுகளுடன் நின்று அணுகும் போக்கினைக் கடைப்பிடிக்காது தமது பகுத்தறிவுக்கும், ஷேக்மார்களின் கருத்துக்களுக்கும், ஊர் மரியாதைக்கும், ஊர்ஜிதமற்ற இரண்டாம் கருத்துகளுக்கும், தனக்கு சரியெனப்பட்ட கருத்தை திணிக்கும் போக்கிற்கும் -இதற்காக தனது ஜூம்ஆவிற்கும்- முன்னுரிமை வழங்குகின்றபோது தீர்வுக்குப் பதிலாக முரண்பாடுகள் சிக்கல்கள் தொடர்கின்றன. 

இன்று சிலர் தனது கருத்துக்கள்தான் சரியென வாதிட்டு, சவால் விடுவதம், போஸ்டர்கள் அடிப்பதும் என்ற நிலையில் இருப்பதைப் பார்க்கிறோம். இதுபோன்ற மனநிலை AIDS   விட சமூகத்திற்கு பாதிப்பாகும். அதாரபூர்வமான செய்திகளை விளங்குவதில் கருத்து முரண்பாடு வருவது தவிர்க்க முடியாதது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஸஹாபாக்களை போன்று நலினமாக நடந்துகொள்ள வேண்டும்.  

 கேள்விகள் 16

கேள்வி – 1 நீங்கள் தண்ணீறைப் பெற்றுக் கொள்ளா விட்டால் தயமம் செய்யுங்கள் என்று எந்த அத்தியாயத்தில் உள்ளது?

கேள்வி – 2 உமர் (ரலி) ஆட்சி காலத்தில் பரவிய நோய் எது?

No comments

Powered by Blogger.