Header Ads



கொலைவெறி புலிகளின் முஸ்லிம்களுக்கு எதிரான சாதனைகள் (படங்கள் + வீடியோ) - சனல் 4 தொலைக்காட்சி காண்பிக்காத புலிகளின் போர்க்குற்ற ஆதாரங்கள்



வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் வெறிபிடித்த அலைந்த பாசிச விடுதலைப் புலிகள் கடந்த காலங்களில் முஸ்லிம்கள் மீது மேற்கொண்ட அராஜகங்கள் பல.

சர்வதேச சமூகமும், மேகத்திய ஊடகங்களும் விடுதலைப் புலிகளின் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான இந்த அக்கிரமங்களை இதுவரை கண்டுகொள்வில்லை. முஸ்லிம் சமூகமும் புலிகள் மேற்கொண்ட அந்த அராஜக நிகழ்வுகளை உலகிற்கு உரியவகையில் எடுத்துக்கூற தவறியுள்ளது.

இந்நிலையில்தான் இன்று புதன்கிழமை பிரிட்டனில் இருந்து செயற்படும் சனல் 4 தொலைக்காட்சி இலங்கை அரசாங்கப் படைகள் விடுதலைப் புலிகளுக்கு எதிராக போர்க்குற்றம் புரிந்ததாககூறி சில ஆவணப்படங்களை காண்பிக்கவுள்ளது.

முஸ்லிம்களாகிய நாமும் சனல் 4 உள்ளிட்ட சர்வதேச ஊடகங்களுக்கு பயங்கரவாதப் புலிகள் மேற்கொண்ட இந்த அக்கிரமங்களையும், போர்க் குற்றங்களையும் அம்பலப்படுத்தும் செயற்பாட்டில் குதிக்கவேண்டும். புலிகள் மேற்கொண்ட இந்த அக்கிரமங்களை உங்கள் பேஸ்புக், மற்றும் டுவிட்டர் உள்ளிட்ட ஏனைய இணையத் தளங்களிலும் பதிவுசெய்யுமாறு அன்புடன் அழைக்கிறோம்..!!




















இரத்தத்தாலும் கண்ணீராலும் எழுதப்பட்ட சோக வரலாற்று நிகழ்வு இது. 1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வடக்கில் வாழ்ந்து வந்த சுமார் 78ஆயிரம் முஸ்லிம் மக்கள் வடக்குக்கு வெளியே புலிகளால் விரட்டப்பட்டனர். யாழ்ப்பாணத்துக்கு வெளியே ஏனைய மாவட்டங்களில் வாழ்ந்த முஸ்லிம் மக்கள் தமது வாழ்விடங்களைவிட்டு வெளியேற 48 மணிநேர அவகாசம் வழங்கப்பட்டது. யாழ் நகர முஸ்லிம்களுக்கு இரண்டே இரண்டு மணிநேரமே கால அவகாசம் வழங்கப்பட்டது.

1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முப்பதாம் திகதி யாழ் நகரப் பகுதிகளில் உறுமிக் கொண்டிருந்த புலிகளின் வாகனங்களிலிருந்த ஒலிபெருக்கிகள் அலறிக்கொண்டிருந்தன.

'யாழ் நகரத்தில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் வட மாகாணத்துக்கு வெளியே செல்ல வேண்டும். உடுத்த உடுப்புடனும் ஐந்நூறு ரூபாவுக்கு மேற்படாத பணத்துடனும் அனைத்து முஸ்லிம்களையும் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரிக்கு வருமாறு இத்தால் அறிவுறுத்தல் விடுக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறி நடப்பவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும்' இதுதான் புலிகளின் அந்த அறிவுறுத்தல்.

ஒஸ்மானியாக் கல்லூரியில் கூடிய அனைத்து முஸ்லிம்களும் லொறிகளில் ஏற்றப்பட்டு வட மாகாணத்துக்கு வெளியே கொண்டு சென்று விடுவிக்கப்பட்டனர். 1981ஆம் ஆண்டின் குடிசன மதிப்பீட்டின்படி யாழ் நகரத்தில் மட்டும் வாழ்ந்த முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை 14,844.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி ஆகிய வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் சுமார் 78ஆயிரம் முஸ்லிம் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். யாழ் நகர முஸ்லிம் மக்களை இரண்டு மணித்தியால கால அவகாசத்தில் வெளியேற்றிய புலிகள், முப்பதாம் திகதிக்கு முன்னதாகவே வடக்கின் ஏனைய மாவட்டங்களில் வாழ்ந்த முஸ்லிம்களை வெளியேற்றினார்கள்.

முதன் முதலாக யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 12 மைல்கள் அப்பாலுள்ள சாவகச்சேரியில் வாழ்ந்து வந்த சுமார் 1500 முஸ்லிம்கள் விரட்டப்பட்டனர். இது அக்டோபர் மாதம் 28ஆம் திகதி இடம்பெற்றது. இதன் பின்னர் கிளிநொச்சி, மன்னார் என்று அனைத்து வடபுல மாவட்டங்களிலிருந்தும் விரட்டப்பட்டனர்.
வடக்கிலிருந்து முஸ்லிம் மக்களை விரட்டுவதற்கு முன்னதாகவே கிழக்கில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்செயல்களைப் புலிகள் கட்டவிழ்த்து விட்டிருந்தனர். 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூன்றாம் திகதி கிழக்கில் காத்தான்குடியிலுள்ள இரண்டு பள்ளிவாசல்களுக்குள் வைத்து 140 முஸ்லிம்களைப் புலிகள் சுட்டுக்கொன்றனர்.

அன்று ஒரு வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹுசைனியா பள்ளிவாசலுக்குள்ளும் மீரா ஜும்மாப் பள்ளிவாசலுக்குள்ளும் ஆயுதபாணிகளாகப் புகுந்த புலிகள் தொழுதுகொண்டிருந்த அப்பாவி முஸ்லிம்களைச் சுட்டுக் கொன்றனர். இத் தாக்குதலின்போது சுமார் 70 முஸ்லிம்கள் காயங்களுக்கு இலக்கானார்கள்.

இக் கொடூரம் இடம்பெற்றுச் சரியாக ஒன்பது நாட்களுக்குப் பின்னர் மற்றொரு இரத்த வேட்டையைப் புலிகள் நடத்தினார்கள். ஏறாவூர், பிச்சிநகர் என்ற முஸ்லிம் கிராமத்துக்குள் ஆயுததாரிகளாகப் புகுந்த புலிகள் 118 முஸ்லிம் மக்களைச் சுட்டும் வெட்டியும் கொன்றனர். இந்த ஈனத்தனமான நடவடிக்கையின்போது கொல்லப்பட்டவர்களில் 51 பேர் ஆண்கள், 36 பேர் பெண்கள், 31 பேர் பிள்ளைகள். நகைகளையும் பெறுமதி வாய்ந்த பொருட்களையும் கூடப் புலிகள் கொள்ளையடித்துச் சென்றனர். மட்டக்களப்பு – பொலநறுவை வீதியில் ஏறாவூர் அமைந்துள்ளது. மட்டக்களப்பிலிருந்து ஒன்பது மைல்கள் அப்பால் ஏறாவூர் உள்ளது. பிச்சிநகர்ப் படுகொலை ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி நடைபெற்றது.

1990ஆம் ஆண்டு கிழக்கில் சுமார் ஐநூறுக்கு மேற்பட்ட முஸ்லிம்களைப் புலிகள் சுட்டுக் கொன்றனர். அந்த வருடம் ஜூலை மாதம் முப்பதாம் திகதி அக்கரைப்பற்றில் 14 முஸ்லிம்கள் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி அம்பாறை, முள்ளியன்காடு என்ற கிராமத்தில் வயல்வெளியில் வேலை செய்துகொண்டிருந்த 17 முஸ்லிம் விவசாயிகளைப் புலிகள் சுட்டுக் கொன்றனர். மறுநாள் ஆறாம் திகதி அம்பாறையில் மேலும் 33 முஸ்லிம் விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 15ஆம் திகதி அம்பாறை, அரந்தலாவைக்கு அருகேயுள்ள முஸ்லிம் கிராமமொன்றுக்குள் புகுந்த புலிகள் ஒன்பது முஸ்லிம்களைச் சுட்டுக் கொன்றனர். இவற்றை விடவும் மேலும் பல படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

வடக்கிலிருந்து முஸ்லிம் மககள் விரட்டப்படுவதற்குச் சில மாதங்கள் முன்னதாக 35 முஸ்லிம் வர்த்தகர்களைப் புலிகள் கடத்திச் சென்றனர். கப்பம் கோரியே இந்த வடபகுதி முஸ்லிம் வர்த்தகர்கள் கடத்தப்பட்டனர்.

இவர்களில் 18 பேர் கடத்தப்பட்டுச் சில மாதங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டனர். ஏனைய 17 வர்த்தகர்களுக்கும் என்ன நடந்ததென்ற மர்மம் இன்றுவரை மூடுமந்திரமாகவே இருக்கிறது. புலிகளுக்குக் கப்பம் வழங்கிய வர்த்தகர்கள் மட்டுமே விடுவிக்கப்பட்டனர்.

வடக்கிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம் மக்கள் புத்தளம், அநுராதபுரம், குருநாகல் உட்படப் பல தென்னிலங்கைப் பகுதிகளில் 150இற்கு மேற்பட்ட அகதி முகாம்களில் தஞ்சமடைந்திருந்தனர். இருபது வருடங்கள் கழிந்துவிட்ட இன்றைய நிலையில் அந்த மக்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகியுள்ளது. இன்னமும் அந்த மக்கள் தமது சொந்த வாழ்விடங்களில் முற்றுமுழுதாக மீள்குடியேற்றப்படவில்லை என்ற நிலைமை தொடரத்தான் செய்கிறது.












மட்டக்களப்பு ஏறாவூர் சதாம் ஹுசைன் கிராமத்தில் 12 ஆம் திகதி, ஆகஸ்ட் மாதம் 1990 ஆம் கொலை வெறியுடன் பாய்ந்த புலி பயங்கரவாதிகள் 116 முஸ்லிம்களை சுட்டும், வெட்டியும் திட்டமிட்டு படுகொலை செய்தனர். புலிகளின் இந்த கொலைவெறி பிடித்த தாக்குதலில் 60 முஸ்லிம் குழந்தைகள் மரணத்தை சுவாசித்தனர்.  மானிட குலத்திற்கு எதிராக புலிப் பயங்கரவாதிகள் புரிந்த போர்க்குற்றத்திற்கு இதனையும்விட ஆதாரங்கள் வேண்டுமா..?? இதோ புலிகளின் கொலைவெறிக்கு பலியான குழந்தைகளின் பெயர் வயது மற்றும் விபரங்கள்

1- ஏ. அப்துல் மஜீத் -(1 வாரம்)-ஆண்
 
2- ஏ. எல். அன்சாரா -(1 மாதம்)- பெண்

3- எம். ஐ. எம். சானாஸ்- (05 மாதம்)- பெண்

4- ஏ. எஸ். பைரூஸ் -(8 மாதம்)- ஆண்

5- எம். ஐ. பர்சான் -(01 வயது)- ஆண்

6- எஸ். சனூஸியா- (01 வயது)-பெண்

7- ஏ. றிபாகா -(01 வயது) -பெண்

8- எச். எம். பஸ்மி -(03 வயது) -ஆண்

9- எம். வை. எம். பசீர் -(03 வயது)- ஆண்

10- யூ. லாபிர் -(03 வயது)- ஆண்

11- எம். ஐ. பர்சானா -(02 வயது)- பெண்

12- ஆர். எப். றம்சியா -(06 வயது)- பெண்

13- எம். எஸ். றம்சுலா- (07 வயது)- பெண்

14- எம். எஸ். சஹீலா- (04 வயது)- பெண்

15- எஸ். எல் நஜீபா -(04 வயது) பெண்

16- எஸ். எல். நஸ்ரின்- (06 வயது) பெண்

17- எம். ஐ. சபீரா -(06 வயது)- பெண்

18- எம். ஐ. எம். தாஹிர்-(06 வயது)- ஆண்

19- எம். எல். எப். றிஸ்னா-(05 வயது)- பெண்

20- எச். எம். ஹிதாயா- (08 வயது)- பெண்

21- எம். எஸ். எம்.அக்ரம்-(6 வயது )

22- எம். எஸ். எம். தல்ஹான்- (08 வயது)

23- எஸ். ஏ. எம். இம்தியாஸ்- (09 வயது)

24- ஆர். எம். சித்தீக் -(8 வயது)- ஆண்

25- ஆர். எப். றம்சியா -(6 வயது)- பெண்

26- எம். சீ. எம். றிஸ்வான் -(10 வயது)

27- எம். ஐ. ஜரூன் -(10 வயது)

28- எஸ். செய்யது அஜ்மல் -(10 வயது)

29- எம். ஐ. அஸ்றப் -(11 வயது)

30- எம். ஐ. எம். ஆரிப் -(12 வயது)

31- எம். கமர்தீன் -(12 வயது)

32- எம். ஐ. எம். அஜ்மல்- (12 வயது)

33- ஏ. எல். மக்கீன்-(12 வயது)

34- எம். எஸ். எம். பௌசர் -(12 வயது)

35- ஏ. எல். அபுல்ஹசன்- (12 வயது)

36- வை. எல். எம். ஹரீஸ்- (12 வயது)

37- எம். எஸ். எம். ஜவாத்- (13 வயது)

38- எம். எஸ். பைசல்-(13 வயது)

39- எம். பீ ஜவாத்- (13 வயது)

40- யூ. எல். எம். அனஸ்- (13 வயது)

41- ஏ. எல் அப்துல் சமத்-(14 வயது)

42- எச். எம். பௌசர்-(14 வயது)

43- ஏ. ஜௌபர்- (14 வயது)

44- எம். எஸ். எம் சகூர் -(14 வயது)

45- ஏ. சமீம்- (14 வயது)

46- எம். இஸ்ஸதீன்- (15 வயது)

47- எம். எம். எம். பைசல் -(15 வயது)

48- எம். எஸ். ஜிப்ரியா -(12 வயது) பெண்

49- எம். எஸ். றமீஸா-(10 வயது)-பெண்

50- எம். பீ. சரீனா-(14 வயது)- பெண்

51- எம். பீ. ஹபீபா- (12 வயது)- பெண்

52- எஸ். எம். அஸ்மி -(11 வயது)-ஆண்

53- எம். எல். சமீமா-(10 வயது)- பெண்

54- எம். எஸ். ஐதுரூஸ் -(11 வயது) ஆண்

55- எல். நயிமுதீன் -(12 வயது)- ஆண்

56- ஏ. எல். பாத்தும்மா-(10 வயது)-பெண்

57- ஜே. எம். நௌபர்-(11 வயது ) -ஆண்

58- யூ. எல். ஏ. சதார்- (13 வயது)- ஆண்

59- ஆர். ஹிதாயா-(10 வயது)- பெண்

60- ஏ. எல் சமீர்-(10 வயது) -ஆண்




 

50 comments:

  1. காத்தான்குடி முஸ்லிம் சகோதரர்கள்

    யாழ் முஸ்லிம் இணையத்தின் சேவைக்கு எமது பாராட்டுக்கள்..!!

    ReplyDelete
  2. மௌலவி எம். இல்யாஸ்
    கொழும்பு - 10.

    யாழ் முஸ்லிம் வெப்தளமானது இலங்கை முஸ்லிம்களின் தேசிய குரலாக ஒலிப்பதற்கான அத்தனை தகுதிகளையும் கொண்டுள்ளது.

    உள்நாட்டு முஸ்லிம்களினதும், சர்வதேச முஸ்லிம்களினதும் துன்பங்களை வெளிக்கொண்டுவரும் யாழ் முஸ்லிம் வெப்தளமானது துறைசார் நிபுணர்களின் கட்டுரைகளையும் உள்ளீர்த்து முஸ்லிம் சமுதாயத்திற்கு மேலும் பங்காற்ற வேண்டுமென வேண்டுகோள்விடுக்கிறேன்.

    ReplyDelete
  3. இந்தியா - தமிழ்நாட்டில் வசிக்கும் பல இலட்சம் முஸ்லிம்களுக்கு, விடுதலைப் புலிகள் சிறிலங்கா முஸ்லிம்களுக்கு மேற்கொண்ட அக்கிரமங்களின் பட்டியல் தெரியாது. மேற்குறிப்பிட்ட இந்த புகைப்படங்களுடன் கூடிய வீடியோவை சகல இந்திய முஸ்லிம்களும் பார்வையிட வேண்டும். ஏனைய இந்திய முஸ்லிம்களும் இதனை பார்வையிட ஊக்குவிக்க வேண்டும்.

    சலீம் கான்
    இந்தியா - சென்னை

    ReplyDelete
  4. To Ms Navee Pillai

    Please take a break from your hectic schedules and watching channel 4 video, to see this video and the photos. Will you come out with any solutions to the Jaffna muslim IDP for their resettlement! Why & on what basis the UNHRC had drawn the line at 2008 to help IDP. Can u enlighten us poor simpletons.

    Dear Tamils of Jaffna

    All modes of hinderances are made to prevent resettlement of Jaffna Muslims by the people of top to bottom level. What had happened to us in 1990, happened to you in 1995. But your people resettled in no quick time BUT JAFFNA MUSLIMS???
    We welcome the report of intelectuals released recently, but to our dismay it does not reflect in the actions. We have learned many lessons, What we need is reconciliation.
    We are ready Are you?

    Muhajireen Colombo

    ReplyDelete
  5. Al-Hafil Moulavi H.M.M. Irshad (Faizi, Malahiri)
    Imam, Al-Anwar Jumma Masjid, Badulla.

    http://www.jaffnamuslim.com இணையத்தள சகோதரர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    வடக்கிலும் கிழக்கிலும் அதிகமான முஸ்லிம் கிராமங்களில் இது போன்ற காட்டுமிராண்டித்தனமான படுகொலைகள் புலிகளினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதை முஸ்லிம்கள் மறந்திருக்கமாட்டார்கள்.

    ஆனால் துரதிஷ்டவசமாக இன்று புலிப்பயங்கரவாதத்தினால் தமிழர்களும் சிங்களவர்களுமே பாதிக்கப்பட்டார்கள் என்றொரு மாயயை ஊடகங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.

    எனவே இது போன்ற தகவல்களை ஒன்றுதிரட்டி ஒரு ஆவணப்படமாக வெளியிடுமாறு உங்களைப் பணிவோடு வேண்டிக் கொள்கிறேன்.

    அது வருங்கால சந்தததியினருக்கு பயனுள்ளதாக அமையும்.

    ReplyDelete
  6. LTT இற்கு இறைவன் கொடுத்த சரியான தண்டனை.

    ReplyDelete
  7. LTT ITCU IRAIVAN CODUTHA SARIYANA THANDANAI..........

    ReplyDelete
  8. emathu muslim samuthayam pulikalal pathikkappattullathu, pulikal manithaphimanamatra muraiyil muslim makkalai konru kuvithullarkal ithu manitha urimai meeral illaiya ? ithanai muslim oodahaviyalaalarkal ulakaththukku velipadutha vendum avvaru seiyum pothuthan pulikalin kurangupuththi ulakukku theriyavarum , ilankai arasu kooda muslim makkal pathikkappattathai oru vivarana padamahe eduththukkaattiyirunthal inru ulakanaadukalukku pulikalin korachcheyalkal theriyavanthirukkum ithai emathu udahaviyalalarkal seiya thavarivittarkal, aanal pulikal mattum chanel 4 niruvanathukku kodikkanakkil dolarai allikkotti poli vivarana
    padangalai ulakukku theriyappaduththu ,

    ReplyDelete
  9. அன்பார்ந்த சகோதரர்களே , எமக்கு நடந்த இந்த கொடுமைகளை நாம் ஆவணப்படுத்துவது மட்டுமின்றி இவற்றை அல்ஜசீரா போன்ற செய்தி ஊடகங்களுக்கு அனுப்பி அவற்றை பகிரங்கப்படுத்த வேண்டும் . அள்ஜசீராவில் தொழில் புரியும் எமது இலங்கை வாழ் முஸ்லிம் சகோதரர்களின் உதவியை இதற்க்காக நாம் பெற்று கொள்ள முடியும்.
    மேலும் இது தொடர்பான சர்வதேசத்தின் கவனஈர்ப்பை பெரும் முகமாக உள்நாட்டிலும் வெளி நாட்டிலுமாக அனைத்து முயற்சிகளையும் நாம் மேற்கொள்ள வேண்டும் . பணத்தினை கோடியாக கொட்டியாகிலும் சரியே

    ReplyDelete
  10. we hate Tamils every Tamils behind the ltte !!!

    ReplyDelete
  11. jaafna inayathalaththirukku vanakkam thangalin kaanoli mattrum pugaippadam kandu migundha vedhanai adaidhen nirkka.
    naan endha iyyakaththirikkaagavum vakkaalaththu vaangavirumbavillai
    indraikku ltte mattrum adhan amaippinar poril maandadhu enbadhu arasaangaththirkkum avargalukkumaanadhu aanaal neengal kurippittulladhu pol edhumariya podhumakkalum pachchilam kuzhaidhagalum ennapaavam seidhanar neengal manidhaththai mattum pesungal madhaththai alla madham manidhanai verikolla seiyum seigiradhu ipooulagil endha madhamu sirandhadhu all ella madhamum makkalai maakalakkiyadhu dhaan michcham nandri

    ReplyDelete
  12. ''we hate Tamils every Tamils behind the LTTE''


    மிகவும் தவறான கருத்து.
    குறுகிய கண்ணோட்டத்துடன் தெரிவிக்கப் பட்ட கருத்து.

    யாழ்ப்பாணத்தில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவைப் பற்றியாவது தெரியுமா?
    அவரும், அவரின் இயக்கமும், மக்களும் கடந்த 23 வருடங்களாகவே கடும் புலி எதிர்ப்பு நிலைப்பாட்டில் இருப்பவர்கள்.

    90 % க்கும் அதிகமான தமிழர்கள், புலிகள் முஸ்லீம்களுக்கு எதிராக செய்த அக்கிரமங்களை
    அங்கீகரிக்கவோ, ஆதரிக்கவோ இல்லை. புலிகள் பற்றிய அதீத பயம், புலிகள் பற்றி ஏற்படுத்தப் பட்டிருந்த மாயை,
    புலிகள் தேனாறும், பாலாறும் ஓடும் ஈழம் என்னும் தமிழர் தேசத்தை பெற்றுத் தருவார்கள் என்ற எதிர்பார்ப்பு
    போன்ற காரணங்களால் பலர் வாய் மூடி இருந்தார்கள்.

    சிலர் பகிரங்கமாகவே எதிர்த்தார்கள். உதாரணத்துக்கு இதே இணையத் தளத்தில் 'நேர்காணல்'
    பகுதியில் கவிஞர் ஜெயபாலனின் பேட்டியை பார்க்கவும்

    ஆகவே, குறுமதியாளர்களான பிரபாகரனும், போட்டு அம்மானும் திட்டம் போட்டு செய்த கொடூரங்களின்
    பழியை சாதாரண தமிழ் மக்கள் மீது போடுவது முற்றிலும் தவறு.

    ReplyDelete
  13. yennala inda video pakka yela avalokku manasu vedana yennaku mattum illa pakkura yellarukkum vedanayatha irikkum ondum theriyada pullel yenna pawam senjanga avangala kuda vittu vekkama kondu pottanga. yellarum kondu LTTE ku yennatha kedachchi. LTTE endu ippa yarume illaye yen enda avalo pawam senji irikkira muslimku yaru pawam senjangalo avangalaku allah dandana kudutachchi. nanga allah namburom.

    ReplyDelete
  14. இலங்கை முஸ்லிம்கள் மீதான விடுதலைப் புலிகளின் கொடுமைகள் PART !


    சிறுபான்மையினர் போராட்டமாக உருவெடுத்த விடுதலைப் புலிகள் அமைப்பு, பின்னர் மற்றொரு சிறுபான்மை இனமான முஸ்லிம் சமூகத்தின் மீது கொடுமைகளையும் படுகொலைகளையும் கட்டவிழ்த்து விட்டமையே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அழிவுக்குக் காரணமாயமைந்தது.

    விடுதலைப் புலிகள், முஸ்லிம் சமூகத்தை நசுக்க ஆரம்பிக்கும் வரைக்கும், அவர்களது போராட்டத்துக்கு தமது உடல், பொருளால் முஸ்லிம்கள் பெரும் உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் வழங்கி வந்துள்ளார்கள்.

    ஆரம்ப கட்டங்களில், புலிகளின் முன்னணி வீரர்களாக நின்று போராடியவர்கள் முஸ்லிம்களே.

    புலி உறுப்பினர்களை, இந்திய இராணுவத்திடமிருந்தும் இலங்கை இராணுவத்திடமிருந்தும் பாதுகாத்துக் காப்பாற்றி வந்தவர்களும் முஸ்லிம்களே.

    புலிகள் வருமானமின்றி நாதியற்றுத் திரிந்த காலப்பகுதிகளில், தமது மாடுகள், வயல் விளைச்சல்கள், வர்த்தகப் பண்டங்கள், பொருளாதாரங்கள், ஆளணியினர் என பலவகையிலும் உதவியவர்கள் முஸ்லிம்களே.

    எனினும், முஸ்லிம்களை தமது இனமொன்றாகக் கருதாது, அவர்களை இரண்டாந்தரமாகவே கருதி வந்த புலிகள், கிடைத்த சந்தர்ப்பங்களில் அவர்கள் மீது படுகொலைகளையும் கொடுமைகளையும் கட்டவிழ்த்து விட்ட போதே, முஸ்லிம்கள் விழித்துக் கொண்டனர். புலிகளுக்கான தமது ஆதரவையும் ஒத்துழைப்பையும் முழுமையாக வாபஸ் பெற்றனர்.

    அதன்பின், முஸ்லிம்களின் பகிரங்க விரோதிகளாகிப் போன புலிகள், அம்முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விட்ட கொடுமைகளும் வன்முறைகளும் மிகக் குரூரமானவை.

    ஏறாவூர் நகரில், எல்லைக் கிராமங்களில், தூங்கிக் கொண்டிருந்த முஸ்லிம் மக்களின் கதவுகளை உடைத்து, ஆயுதங்களுடன் உள்ளே புகுந்த புலிகள், அங்கு உறக்கத்திலிருந்த மக்களை சுட்டுக் கொன்றனர். கற்பிணிப் பெண்களின் வயிற்றைக் கிழித்து, சிசுவை வெளியே இழுத்தெடுத்து, சுவரில் அடித்துக் கொன்றனர்.

    அன்று படுகொலை செய்யப்பட்ட மக்களின் எண்ணிக்கை 201. இவர்களுள் கற்பழிக்கப்பட்ட யுவதிகளும், கழுத்தறுக்கப்பட்ட இளைஞர்களும் அதிகம். குழந்தைகள், சிறுவர்கள், வயோதிபர்கள் பெண்கள் என்ற எவ்வித வேறுபாடுமின்றி புலிகளினால் இப்படுகொலை அரங்கேற்றப்பட்டது.

    காத்தான்குடி நகரில், பள்ளிவாயலொன்றில் தொழுகையிலிருந்த மக்களை புலிகள் புறமுதுகில் சுட்டுக் கொன்றனர். இதில், சிறுவர்கள் பெரியோர்கள் உள்ளடங்கலாக 213 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

    அழிஞ்சிப் பொத்தானை எனும் கிராமத்தில், ஓர் நள்ளிரவில், ஆயுதங்களுடன் உட்புகுந்த விடுதலைப் புலிகள், அங்கிருந்த மக்களை சுட்டும் வெட்டியும் கொன்று குவித்தனர். இதில் பலியானோரின் எண்ணிக்கை 77.

    முஸ்லிம் காலனி மக்களில் 56 பேர், புனித மக்கா நகருக்குச் சென்று தமது ஹஜ் கடமைகளை நிறைவேற்றி விட்டு, பரிசுத்தமான நிலையில் ஊர் திரும்பி வந்து கொண்டிருக்கும் போது, வழிமறித்த புலிகள், அவர்கள் அனைவரையும் வாகனத்திலிருந்து இறக்கி, வரிசையாக நிறுத்தி வைத்து, கண்களையும் கைகளையும் கட்டி விட்டு, நெற்றிப் பொட்டில் சுட்டுக் கொன்றனர். வாகனத்தையும் தீயிட்டுக் கொழுத்தினர்.

    வடக்கில், பூர்வீகமாக வாழ்ந்து வந்த முஸ்லிம்களை, ஒரே இரவில், புலிகள் அச்சுறுத்தி வெளியேற்றினர். வெளியேற மறுத்தவர்களை அடித்துத் துன்புறுத்தினர்.

    ஐம்பது ரூபா பணமும் ஒரு மாற்றுடையும் தவிர எதனையும் கொண்டு செல்ல முடியாது என்று நிபந்தனை விதித்தனர்.

    தமது பூர்வீக மண், தமது வயல் நிலங்கள், தமது வீடுகள், சொத்து சுகங்கள், கோடிக்கணக்கான வர்த்தகப் பொருட்கள் அனைத்தையும் பறித்தெடுத்துக் கொண்டு அந்த வடபுலத்து முஸ்லிம்களை அகதிகளாக விரட்டியடித்தனர் இந்தப் புலிகள்.

    மூதூரில், சமூக சேவைகளில் ஈடுபாடு காட்டி வரும் முஸ்லிம் இளைஞர்களை இனங்கண்டு, அவர்கள் அனைவரையும் கைது செய்து அழைத்துச் சென்று, வரிசையில் நிறுத்தி வைத்து சுட்டுக் கொன்றனர்.

    25க்கும் அதிகமான துடிப்பான முஸ்லிம் இளைஞர்கள் இதன்போது படுகொலை செய்யப்பட்டனர்.

    வடகிழக்கிலுள்ள முஸ்லிம்களிடமிருந்து கப்பம், ஆட்கடத்தல், கொள்ளை, திருட்டு என புலிகள் சேகரித்துள்ள பொருளாதாரத்தின் மொத்தத் தொகை, 550 கோடிகளையும் தாண்டுவதாக ஒரு கணிப்பீடுள்ளது.

    அதேவேளை, வடக்கிலிருந்து புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட மக்களிடமிருந்து புலிகள் அபகரித்துக் கொண்ட பொருளாதாரத்தின் மொத்தத் தொகை 1135 கோடிகளையும் தாண்டும் என்பது சரிகாணப்பட்ட புள்ளிவிபரமாகும்.


    continued.....

    ReplyDelete
  15. இந்தச் செய்தி கட்டாயமாக MOST POPULAR NEWS என்ற பகுதியில்
    உள்ளடக்கப் பட்டு முகப்பில் இருக்க வேண்டும்.
    இது மிகம உக்கியமான செய்தி ஆகும்.

    இப்பொழுது MOST POPULAR NEWS இல் இருக்கும் பல செய்திகள் எந்த முக்கியத்துவமும் இல்லாதவை.
    அவற்றை நீக்கிவிட்டு பொருத்தமான செய்திகளை, கட்டுரைகளை இடவும்.

    நன்றி.

    ReplyDelete
  16. இலங்கை முஸ்லிம்கள் மீதான விடுதலைப் புலிகளின் கொடுமைகள் PART 1.

    இது தவிர, புலிகளால் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட முஸ்லிம் புத்திஜீவிகள் மற்றும் கல்விமான்கள் போன்றோரின் தொகையும் அளப்பரியது.

    400க்கு மேற்பட்ட முஸ்லிம் ஆசிரியர்கள், 113 முஸ்லிம் பாடசாலை அதிபர்கள், 50க்கு மேற்பட்ட முஸ்லிம் சிற்றூழியர்கள், 25க்கு மேற்பட்ட கல்வி நிருவாக சேவை அதிகாரிகள், 10 நிருவாக சேவை அதிகாரிகள் எனத் தொடரும் இப்பட்டியல்,

    முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்தைக் கருவறுத்த புலிகளின் குரூரத்தையும் அயோக்கியத்தனத்தையும் நிறுவப் போதுமானவையாகும்.

    மன்னார் அரச அதிபர் மக்பூல், மூதூர் உதவி அரச அதிபர் ஹபீப் முஹம்மத், ஓட்டமாவடி உதவி அரச அதிபர் ஏ.கே. உதுமான், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரச அதிபர் வை. அஹ்மது, காத்தான்குடி உதவி அரச அதிபர் ஏ.எல். பளீல் போன்றோர் இத்தகைய முஸ்லிம் புத்தி ஜீவிகள் உயரதிகாரிகள் போன்றவர்களுள் முக்கியமானவர்கள்.

    இவர்கள் அனைவரும் எஸ்.எல்.ஏ.எஸ். மற்றும் எஸ்.எல்.ஈ.ஏ.எஸ். போன்ற நாட்டின் அதியுயா நிருவாகப் பரீட்சையில் திறமைச் சித்தியடைந்து, மாவட்ட நிருவாக அதிகாரிகளாகக் கடமையாற்றிய மிகப் பெரும் முஸ்லிம் ஆளுமைகள்.

    இவர்கள் மீதான புலிகளின் படுகொலைகள், முஸ்லிம் சமூகத்தின் மீது அவர்களுக்கிருந்த இனவெறியையும் குரூரத்தையுமே காட்டுகின்றன.

    இவை தவிர, புலிகளினால் அழிக்கப்பட்ட முஸ்லிம்களின் வீடுகள், வழிபாட்டுத் தலங்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் ஏனைய பொருளாதாரங்கள் என்பனவற்றின் மொத்தப் பெறுமதி 150 0 கோடிகளுக்கும் அதிகமானதாகும்.

    ஒட்டுமொத்தமாக, படுகொலைகள் எனும் அத்திவாரத்தில் கட்டியெழுப்பப்பட்ட பாதகச் செயல்களின் மொத்த வடிவமே இந்தப் புலிகள் இயக்கமாகும்.

    ஆரம்பத்தில் தமது சக போராட்டக் குழுக்களை அழிப்பதில் கவனம் செலுத்திய புலித் தலைவர் பிரபாகரன், அதன்பின், தனது போராட்ட நடவடிக்கைகளை மறுக்கின்ற, எதிர்க்கின்ற, மற்றும் நியாயம் பேசுகின்ற தமிழ்த் தலைவர்கள் அனைவரையும் கொன்றொழித்தார்.

    துரோகம் என, தான் அரங்கேற்றிய படுகொலைகளுக்கு நியாயமும் கற்பித்தார்.

    அதன்பின், முஸ்லிம் சமூகத்திலிருந்த கல்விமான்கள், புத்திஜீவிகளையும் சமூக முன்னோடிகளையும் தேடித் தேடிக் கருவறுத்தார்.

    முஸ்லிம்களின் பொருளாதாரங்களை சூறையாடினார்.

    குறிப்பாக வடக்கிலிருந்த முஸ்லிம்கள் செல்வச் செழிப்போடு வாழ்ந்து வருவதைப் பொறுத்துக் கொள்ள முடியாத புலித்தலைவர் அவர்களது சொத்துக்கள் அனைத்தையும் அபகரித்துக் கொண்டு அவர்களை அகதிகளாக விரட்டி விட்டார்.

    முஸ்லிம்களை பொருளாதார ரீதியாக நசுக்கியது போதாதென்று, கல்வி ரீதியாகவும் அவர்களை நசுக்க முனைந்தனர் புலிகள்.

    தமக்கு ஆதரவாக உள்ள தமிழ் நிருவாக அதிகாரிகள் மற்றும் கல்வி நிருவாக சேவை அதிகாரிகளைக் கொண்டு முஸ்லிம்களுக்குக் கிடைத்து வந்த கல்வி வாய்ப்புகளையும் படிப்படியாகப் பறித்தெடுத்தனர்.

    இதற்கும் மேலாக முஸ்லிம்களின் காணிகளையும் வயல் நிலங்களையும் பறிமுதல் செய்து, அதில் தமது ஆதரவாளர்களைக் குடியமர்த்தியதோடு முஸ்லிம்களின் வயல் நிலங்களில் தாங்கள் பயிர்களையும் விவசாயங்களையும் மேற்கொள்ளவும், அல்லது முஸ்லிம்களை விவசாயம் மேற்கொள்ள அனுமதித்து விட்டு, அறுவடைக் காலப்பகுதியில் அவர்களை அச்சுறுத்தி,

    பிரதேசத்துக்குள் வர விடாது தடுத்து தாங்களே அறுவடை செய்து இலாபத்தைப் பெருக்கிக் கொள்ளும் வழக்கத்தை மேற்கொள்ளவும் அவர்கள் நன்கு பழக்கப்பட்டுப் போயினர்.

    முஸ்லிம்கள் தமது விவசாயத் தேவைகளுக்காகப் பயன்படுத்தி வந்த வாகனங்கள், அன்றாடப் பாவனைக்காக வைத்திருந்த வாகனங்கள் உள்ளிட்ட பல வாகனங்கள் புலிகளினால் பறித்துச் செல்லப்பட்டுள்ளன.

    அவை ஒரு போதும் மீள ஒப்படைக்கப்பட்டது கிடையாது.

    ஜீரணிக்க முடியாமல் தமது வாகனங்களைத் தேடித் தமிழ்ப் பகுதிக்குள் செல்லும் முஸ்லிம்கள் திரும்பி வந்தால் சடலமாக வருவார்கள், அல்லது காணாமல் போவார்கள்.

    இவ்வாறு அரசியல், கல்வி, அபிவிருத்தி, பொருளாதாரம், வர்த்தகம், நிலம் என எல்லா வகையிலும் முஸ்லிம்கள் எதிர்கொண்ட பேரிழப்புகளுக்கான முழுப் பொறுப்பையும் புலிகளும் புலிகளின் தலைவர் பிரபாகரனும் மற்றும் அவரது சகாக்களும்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.


    continued.....

    ReplyDelete
  17. இலங்கை முஸ்லிம்கள் மீதான விடுதலைப் புலிகளின் கொடுமைகள் PART 3.


    இவ்வளவு குரூரத்தையும் செய்து முடித்த பின்னும், பிரபாகரனை தேசியத் தலைவர் என்றும், புலிகள் விடுதலைப் போராளிகள் என்றும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் சில இந்திய அரசியற் கட்சித் தலைவர்கள் குறித்தும் நாம் மிகவும் விசனங் கொள்ள வேண்டி ஏற்படுகின்றது.

    தமது அற்ப அரசியல் நலன்களுக்காகவும், பிழைப்புவாதத்துக்காவுமே இத்தகைய நடவடிக்கைகளில் இறங்கி, புலிகள் கொல்லப்பட்டமையைக் கண்டித்தும் தமிழ் மக்கள் அழிக்கப்பட்டமையை எதிர்த்தும் போராட்டமும் ஆர்ப்பாட்டமும் நடத்தி வரும் இவர்கள்,

    சில காலங்களுக்கு முன்பு, புலிகளின் பாசிசவாதத்தினால் தமிழ் மக்கள் சுதந்திரமும் உரிமையும் இழந்து சிறைப்படுத்தப்பட்ட கைதிகள் போன்ற வாழ்ந்த போதும்,

    புலிகளினால் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் எவ்வித நியாயமுமின்றிக் கொன்று குவிக்கப்பட்டு வந்த போதும் எங்கே போயிருந்தார்கள்?

    உண்மையில் இவர்களது நோக்கம் தமிழ் மக்களைப் பாதுகாப்பதா?

    அல்லது தமது அரசியல் பிழைப்பைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினையை ஒரு கொழுகம்பாகப் பயன்படுத்திக் கொள்வதா?


    SOURCE : http://irukkam.blogspot.com/2010/06/blog-post_14.html



    புலிகள் தமிழ் இன விடுதலைக்கு போராடினார்களா? இல்லை தங்கள் ஏகாதிபத்தியத்திற்காக போராடினார்களா? என்பதை வரலாற்றை நோக்கினால் உங்களுக்குத் தெரியும்.

    இலங்கையில் முஸ்லிம்களுக்கு நடந்திருப்பது என்ன? நடப்பது என்ன? என்பது பற்றி தெளிவாக இந்திய மக்களுக்கு கூற வேண்டியுள்ளது.

    உண்மை அறியாத மக்கள் கொடூரப் புலிகளுக்கு ஆதரவுக் கொடி தூக்குகின்றனர்

    ஈழத்தில் புலிகளால் வதைக்கப்பட்ட, இன அழிப்பு செய்யப்பட்ட‌ இஸ்லாமியர்கள் குறித்தப் பேச மறுப்பவனும் பேசுவதைத் தடைசெய்பவனும் தான் விரும்பிய குரலில் இஸ்லாமியர்களைப் பேச நிர்ப்பந்திப்பவனும் இஸ்லாமியர்களின் தோழனா அல்லது மூத்த‌ நரேந்திர மோடியா எனத் தோழர்கள் சிந்திக்க வேண்டும்

    புலிகளின் 1985 ஆண்டு ஆகஸ்டில் தொடங்கிய முஸ்லீம்கள் மீதான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையானது 2006ம் ஆண்டு திருகோணமலையில் அமைந்துள்ள முஸ்லீம் கிராம்மான மூதூர் சுற்றி வளைக்கப்பட்டு அது அரச படையினரால் மீட்கப்படும் வரை தொடர்ந்தது என்பதே கசப்பான உண்மை . .


    சொடுக்கி >>>>>>> பகுதி 1
    புலிகளின் ஈழத்தமிழ் முஸ்லீம் இன‌ஒழிப்பு.
    <<<<<<< படியுங்கள்


    சொடுக்கி >>>>>
    பாகம் 2. புலி பயங்கரவாதம். .புலிகளின் முஸ்லீம் இன அழிப்பு. மன்னிப்போம் மறக்கமாட்டோம்.
    <<<<<<, படியுங்கள்



    சொடுக்கி >>>>>>
    பகுதி 3 புலி பயங்கரவாதம். .புலிகளின் தமிழ்முஸ்லிம் இனஒழிப்பின் ஈரநினைவுகள்..
    <<<<<<<< படியுங்கள்.

    .
    .

    ReplyDelete
  18. AHHHHH... MUSLIM ENNUM MATHAM MATTUME UNGALUKU THERIKIRATHU.. OSAMA BINLADANAL KOLLAPATTA ETHANAI KULANTHAIKAL UNGALUKU THERIYAVILLAIYA.. MANITHANAGA PAARUNGAL. 98 KULANTHAIKAL KUMBAKONAM THEEYIL KARUKI ERANTHARKAL ATHARKU ENNA SOLVEERKAL. UNGALUKU MATHAM MATTUME THAN VERI, ENGALUKU MANITHANAI NAL VALI PADUTHUM NERI THAN THEVAI.

    ReplyDelete
  19. கும்பகோணம் தீ விபத்துக்கும் இப்பொழுது முஸ்லீம்களின் மீது பழி போட்டு விட்டீர்களா?

    இன்னும் கொஞ்சம் விட்டால்,ஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு வெடிப்பையும்,
    ஏன் 2004 டிசம்பர் சுனாமயையும் முஸ்லீம்கள்தான் செய்தார்கள் என்று சங்பரிவார் கும்பல்கள்
    சொன்னாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. அப்படியே ''தானே'' புயலும் முஸ்லீம்களின் சதிதான்
    என்று சொல்லுவீர்கள் போலும்.

    உசாமா பின் லேடனை ஆதரித்து, முஸ்லீம்கள் ஊர்வலமும், உண்ணாவிரதமுமா
    நடாத்துகின்றார்கள்? ஒசாமா பின் லேடனை முன்னிலைப் படுத்தி ஆதரிக்கும்
    ஒரு அரசியல் கட்ச்சியைத் தானும் உங்களால் காட்ட முடியுமா?

    ஒசாமா பின் லாடன் பற்றிய முஸ்லீம்களின், இஸ்லாத்தின் நிலைப்பாட்டை
    தமிழுலகின் இஸ்லாமிய அறிஞர் P . ஜெய்னுலாப்தீன் மற்றும்,
    ஜாமியுல் தேவ்பந்த் தெளிவாக சொல்லியுள்ளது உங்களுக்கு தெரியாதா?

    நீங்கள்தான் மிகக் கொடூர பயங்கரவாதியான பிரபாகரனை தூக்கிப் பிடித்துக் கொண்டு
    அலைகின்றீர்கள்.

    ReplyDelete
  20. انالله وإناإليه راجعون

    ReplyDelete
  21. In jaffna they killed us the killed the muslim. Ya Allah show us way to those who hate muslim. Any body can kill muslim but cannot kill Islam.
    Ya Allah praise sinhala or tamil but if they harm us in any way please punish them. Ya Allah save us.

    ReplyDelete
  22. Muslim nanbargale pulligal intha kollaigalai seiyya enna kaaranam endru sollungalen. hunamiya kaaranam intha muslim gal puligalai kaatti koduthaargal. ithu than 100 hunmai. kaatti koduththathukku thandanai. marana thandanai than. muslim gal romba kevelamaaba thamilargalai kaatti koduthargal. ippa summa puligal mithu kuththam sollathirgal.kaatti koduppu muslimgalin reththaththil kalantha palakkam.

    ReplyDelete
  23. plss kaatti kodukkum palakaththai niruththungal. neengal kaatti kodutheergal puligal kondaargal.ithu than hunmai

    ReplyDelete
  24. I cannot believe most people have forgotten this outrage. The Tamils must hang their heads in shame and cry for the innocent Muslim blood that they have shed.

    ReplyDelete
  25. காலத்தின் வடுக்கள் இவை!
    ஒவ்வொரு புலி ஆதரவாளனும் பார்க்க வெண்டியது இது...!
    ஈழ தமிழர்களே நீங்கள் சொல்வது போல முஸ்லீம்கள் மட்டுமே உங்களை காட்டிக்கொடுத்து உங்கள் போராட்டத்தை சிதைக்க உதவினார்கள் என்பது தவறான கருத்து. பிரபாகரனோடு கூட இருந்த கருணா கே.பி போன்றவர்கள் காட்டிக்கொடுக்கவில்லையா?

    சிறுபாண்மை இனத்திற்குள் ஒற்றுமையின்மையே உ்ங்கள் அழிவுக்கு காரணம்.

    முஸ்லிம்களாகிய நாங்கள் பேசுவதும் தமிழ் மொழி தான்.
    ஆனால் எம் மார்க்கம் இஸ்லா்ம்.

    நாங்கள் காசுக்காக வெள்ளைக்காரனுக்கு பின்னால் போய் மதம் மாறவில்லை...! இஸ்லா்ம் மார்க்கம் பிடித்ததாலே மாறினோம்.

    உங்கள் அனைவரையும் ஓர் நாள் இஸ்லாமியனாக மாற்றும் வரை எம் முயற்சிகள் தொடரும்.

    ReplyDelete
  26. சிறிலங்காவில் நடந்த படு கொலைகள் துன்பங்கள் எல்லாம் பழி வாங்கல்களே இதில் யாரும் தங்களை உத்தமர்களாக காட்ட முடியாது முஸ்லிம்களும் கிழக்கில் தமிழர்களை படுகொலை செய்து இருக்கிறார்கள் தமிழர்களும் செய்து இருக்கிறார்கள் அவ்வாறே சிங்களவர்களும் முஸ்லிம் தமிழர் பிரச்னையை தொடக்கி வைத்தது யார் என்று அல்லது எந்த பகுதி என்று நேர்மையுடன் பதில் கூற முடியுமா.தமிழர்கள் தமக்கு அரசியல் தீர்வை நாடும் போது மட்டும் ஏன் முசிலீம் கள் இடையில் புகுந்து அதை குழப்பு கிறார்கள் என்று தெரியவில்லை தங்களுக்கும் தீர்வு வேண்டும் என்று சொல்லும் முஸ்லிம் கள் அரசிடம் தமக்கு உள்ள பிரசனைகளை கேட்பது இல்லை அதற்கு ஒரு போராட்டம் நடத்தவும் இல்லை ஆனால் பிரசனை உண்டு என்கிறார்கள் .இன்றைய சுழலில் வேறு ஆயுத குழுக்கள் இல்லாத நிலையில் வடக்கு கிழக்கு ஒரு அரசியல் தீர்வை கிடைக்க முஸ்லிம்கள் தடையாக இருக்க கூடாது தீர்வு வந்த பின் எந்த வழிகளில் பாதிப்பு வருகிறது என்கிற அடிப்படையில் கோரிக்கைளை வைக்கலாம் இன குரோதங்களால் நாங்கள் இழந்தது ஏராளம் என்பதை புரிந்து சமாதானத்துக்கு துணை நிக்க வேண்டும்

    ReplyDelete
  27. காட்டி கொடுப்பது முஸ்லிம்களின் ரத்தத்தில் ஊறியது என்று சொல்லிய நண்பரே, உங்களை எல்லாம் வல்ல இறைவன் காப்பற்றுவனாக

    ReplyDelete
  28. kattankudi eraavur kolikaluku yaru thalimaithanke saithavan karunana amman pillayan avarkali ennum thandiikamal arasankam pathukakakerathu muthali averkali thandikavandum karuna piliyan why this kolavary di

    ReplyDelete
  29. please forget all whatever happend in past.now we think about future.together we will fight for our right .

    ReplyDelete
  30. புலிகள் முஸ்லீம் மக்களுக்கெதிராக வன்மையாக கொடூரமாக நடந்துகொண்டார்கள் என்பது உண்மையே. ஏன்? அவர்கள் அப்படி நடந்து கொண்டார்கள் என்பதை அறிய பக்கச்சார்பின்றி நியாயக்கண் கொண்டு சிந்திப்பதன் மூலமே அதன் தார்ப்பரியத்தை உணர்ந்து கொள்ள முடியும்.

    தமிழர்களின் சார்பில் புலிகளால் முஸ்லீம் மக்களுக்கெதிராக எவ்வாறான கொடுமைகள் எல்லாம் நிகழ்த்தப்பட்டதோ அதே போன்றே அதற்கு எவ்வகையிலும் குறைத்து மதிப்பிட முடியாத கொடுமைகள் முஸ்லீம் மக்கள் சார்பாக முஸ்லீம் குழுக்களாலும் அரசபடைகளின் ஆசிபெற்ற முஸ்லீம் ஊர்காவல் படைகளாலும் தமிழ்மக்களுக்குகெதிராக நிகழ்த்தப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரங்களை தங்களைப்போன்று விலாவாரியாக தரவும் முடியும். எனினும், மீண்டும் இக் குப்பைகளைக்கிளறி பகைவளர்த்து மீண்டும் சிங்கள பேரினவாதமே நன்மையையும் வெற்றியையும் தட்டிச்செல்லும் வாய்ப்பை நாங்களே பெற்றுக்கொடுப்பது அறிவுபூர்வமானது அல்ல.

    ReplyDelete
  31. இலங்கை முஸ்லிம்களுக்கு தனியானதொரு ஊடக வலையமைப்பு இல்லை என்ற குறையை நிறைவாக நிவர்த்தி செய்யும் தகுதி jaffnamuslim இணையத் தளத்திற்கு இருப்பதை மிகத்துல்லியமாக பதிவேற்றப் பட்டிருக்கும் உங்களது பதிவுகள் பறை சாட்டுகின்றன.

    உங்களது வெற்றிக்கும் ,வளர்ச்சிக்கும் அஹ்லுல்பைத் தமிழ் தளத்தின் உளப்பூர்வமான வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  32. WERY GOOD AND WRITER BUT WE ARE SAD AND CRYING THE OUR PAST AWAY OF MUSLIM WITH OUT PROBLAM

    ReplyDelete
  33. Stop this useless talks , and re construct relationships...............

    ReplyDelete
  34. அங்கள் மனம்கொதிக்குது

    ReplyDelete
  35. Find strong alternative ways to re buildup the relationship among all communities. But don't try to cheat Muslims again. you have more well experience about the past. Muslims have confident at Allah He is the one, creator/owner of the global.

    ReplyDelete
  36. இலங்கையில் முதன் முதலில் ஆரம்பித்த கலவரமே இஸ்லாமியர்களுக்கு எதிரானது தான். வர்த்தகத்தில் முன்னணியில் இருந்த முஸ்லிம்களை ஒழிக்க ஈழதமிழ்,சிங்கள கூட்டணி வெறியாட்டம் போட்டது வரலாற்று உண்மை

    1915 ல் நடந்த சிங்கள - முஸ்லிம் கலவரம் காரணமாக, பல சிங்கள-பௌத்த அரசியல் தலைவர்கள் ஆங்கிலேய அரசினால் கைது செய்யப்பட்டனர். இவர்களின் விடுதலைக்காக லண்டன் சென்று பிரிட்டிஷ் அரசுடன் பேசிய முக்கிய பிரமுகர்கள் இருவர். ஒருவர் இராமநாதன், மற்றவர் பெரேரா.

    அண்மையில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் தமிழ் தேசிய நாளிதழ் ஒன்று, "சிங்கள-பௌத்த பேரினவாத வெறித்தனத்தின் வரலாற்றை" நினைவு படுத்தியிருந்தது. "சிங்கள பேரினவாதத்தின் முதலாவது இனவெறித் தாக்குதல் முஸ்லிம்கள் மீதானது", என்ற வரலாற்று உண்மையை எடுத்துக் கூறியது. உண்மை தான். அன்றைய ஆங்கிலேய ஆட்சியாளர்கள், கலவரத்திற்கு காரணமானவர்கள் மேல் நடவடிக்கை எடுத்து, சிங்களப் பேரினவாதத்தின் முதுகெலும்பை உடைத்து விட்டிருந்தனர். தமிழ் தேசியவாதிகளின் நாயகனான இராமநாதன், இங்கிலாந்து சென்று வழக்காடி, சிங்கள பேரினவாதத் தலைவர்களை விடுவித்தார். 1918 ம் ஆண்டு தமிழர் தலைவர் என்று சொல்லப்பட்ட சேர்.பொன் இராமநாதனை சிங்கள மக்கள் கொழும்பு வீதிகளிலே தங்களது தேள்களிலே சுமந்தவாறு ஊர்வலம் போகிறார்கள். அவர் பயணம் செய்த குதிரை வண்டியை குதிரைகளுக்கு பதிலாக தாங்களே இழுத்துச் சென்றார்கள்.

    முஸ்லிம்களை அழிப்பதில் சிங்களவர்களை விட ஈழத்தமிழர்கள் முன்னணியில் இருந்தார்கள் என்பதை இங்கு இனவெறி பேசும் முஸ்லிம் பெயர் தாங்கிகள் புரிந்து கொள்வார்களா??

    (புகைப்படம் முஸ்லிம்களை கொன்ற சிங்களவர்களுக்காக இங்கிலந்து சென்று வாதாடிய அன்றைய ஈழத்தமிழர்களின் தலைவர் சர்.இராமநாதன்)

    ReplyDelete
  37. YA ALLHA IN MUSALMANO KE MADAD FARMA HUM SE KUCH GALTI HOGAYE HOTO MAAF FARMA AMIN SUMMA AAMIN................

    ReplyDelete
  38. தேசியன் கருத்துக்கு என்ன பதில்....

    ReplyDelete
  39. wவெறும் முஸ்லிம்கள் மீது தாக்குதல் என பேசி பேசி காலம் கடத்தும் இந்த கொடூர கோமாளியும் அதன முஸ்லிம் வியாபார மந்திரிகளுளும் இது பற்றியும் பேச வண்டும்..
    கிழக்கு மாகாணத்தில் மோசமான தாக்குதலுக்கு உள்ளான பிரதேசங்களாக வாழைச் சேனை, செங்கலடி ஆரையம்பதி, நீலாவனை, பாண்டிருப்பு முதலானவை காணப்படுகின்றன. குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களால் தமிழ்க் கிராமங்கள் பல அழிவுற்றன. பரம்பரை பரம்பரையாகத் தமிழர்கள் வாழ்ந்து சூறையாடப்பட்டு இன்று சிதைவுக்குள்ளான கிராமங்களாகப் பாலமுனை, பாணமை, மீனோடைக்கட்டு, ஒலுவில், நிந்தவூலீ, சம்மாந்துறை, கரவாகு, தீகவாவி, மாந்தோட்டம், கொண்டா வெட்டுவான், பூரணி, செம்மணிக்குளம், தங்கவேலாயுதபுரம், உடும்பன்குளம் முதலானவை காணப்படுகின்றன. தமிழர்கள் வாழ்ந்தமைக்கான சுவடுகள் துடைத்தழிக்கப்பட்டு இக்கிராமங்கள் இன்று முஸ்லிம் கிராமங்களாக மாறியுள்ளன. இச்சூழலில் அம்பாறை மாவட்டத்தில் படிப்படியாக முஸ்லிம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் தமிழ்க் கிராமங்களாக அட்டைப்பள்ளம், சவளக்கடை, திறாய்க்கேணி, சொறிக்கல்முனை, மீராச்சோலை முதலானவற்றைக் கூறலாம். இப்பூர்வீகக் கிராமங்களில் பிறந்த தமிழர்கள் பலர் இவ்வன்முறையோடு தாக்குதல்களுக்கு உள்ளானவராகவும் தம் சுயமிழந்து அகதி அந்தஸ்து அங்கீகரிக்கப்படாதவராகவும் காணப்பட்டனர். முஸ்லிம் இனவாதக் குழுக்களால் இக்கிராமப் பெண்கள் பலர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதோடு மிலேச்சத்தனமான முறையில் படுகொலையும் செய்யப்பட்டனர்.
    1990களில் திறாய்க்கேணி, நிந்தவூலீ, வீரமுனை முதலான தமிழ்ப் பிரதேசங்களில் முஸ்லிம் தீவிரவாதக் குழுக்களால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் அறத்திற்குப் புறம்பானவை. திராய்க்கேணி பிள்ளையார் கோயிலில் உயிருக்கஞ்சி அடைக்கலம் புகுந்த தமிழ் இளைஞர்கள், யுவதிகளை அடித்தும் வெட்டியும் கொன்ற முஸ்லிம் இனவாதக் குழுக்கள் நிந்தவூர் முருகன் கோவிலில் 64 தமிழர்களையும் வீரமுனைப் பிள்ளையார் கோயிலில் 85 இளைஞர்களையும் படுகொலைசெய்தனர்.தவிர இக்காலப்பகுதியில் ஏராளமான இந்து ஆலயங்கள் சுவடுகள் இன்றி அழித்தொழிக்கப்பட்டன. சம்மாந் துறைக் காளிகோயில், அட்டப்பள்ளம் மீனாட்சியம்மன் கோயில் கல்முனை கரவாகு காளிகோயில் மீனோடைக்கட்டுப் பிள்ளையார் கோயில் ஓட்டமாவடிப் பிள்ளையார் கோயில் எனப் பல இந்துக் கோயில்கள் முஸ்லிம்களால் சிதைக்கப்பட்டுக் கோயில்கள் பள்ளிவாசல்களாகவும் (கரவாகு காளிகோயில்), மாட்டிறைச்சிக் கடைகளாகவும் (ஓட்டமாவடி பிள்ளையார் கோயில்) இன்று மாற்றப்பட்டுள்ளன.

    அது வரை இன ஐக்கியம் முஸ்லிம் தமிழர்களுக்கு இடையில் ஏற்படாது..இது வெறும் சாம்பிள் தான்..முஸ்லிம் தலைமை சுய நலன் தவிர்த்து நேர்மையுடன் செயல்பட முன் வர வேண்டும்...
    அவர்களுக்கு தமிழர்களை விட முஸ்லிம்களுக்கு நேர்மையாக நடக்க பலகை வேண்டும்..

    ReplyDelete
  40. என் இஸ்லாமிய சகோதர்களுக்கு வணக்கம் ...........ஒரு விடுதலை இயக்கம்அதன் இன விடுதலையை வென்றுயெடுக்க சகல வழிகளையும் கையாளும் என்பது வழமை........அந்த வகையில் தனக்கு ஒத்துழைப்பு வழங்காத தன் இன குழுக்களை கூட அழிக்கும் என்பது வரலாற்று உண்மை........அந்த வகையில் கல நிலைப்பாட்டில் உங்கள் சமுதா யமக்கள் அவர்களுக்கு ஒத்துழைக்காமல் காட்டி கொடுப்பு வேலைசெய்ததாக...அறியப்பட்டு தண்டனை வழங்கபட்டாக அறிகிறோம.... உங்கள் துயரங்களில் பங்குபெருகிறோம்...........

    ReplyDelete
  41. முஸ்லீம்கள் தமிழராலும் தமிழர் முஸலீம்களாலும் படுகொலை செய்யப்பட்டது உண்மை தான். அது போன்ற கொடுமைகள் இனியும் நடக்காதிருக்க எப்படி தமிழ்பேசும் சமூகமாக ஐக்கியப்பட்டு அவரவர் தங்களின் உரிமையுடன் வாழலாம் என்பது பற்றியதற்கான கலந்துரையாடலுக்கான வழி உண்டா எனப் பார்க்க வேண்டும். தமிரவும் தமிழின அழிப்புப் போல் முஸ்லீம்களும் சிங்களப் பேரினவாத அரசால் அழிக்கப்பட்டதற்கான பல சம்பவங்கள் உண்டு 1915இல் மட்டுமல்ல 1974 இல் புத்தளப் படுகொலை, 1961 இல் மட்டக்களப்பையும் அம்பாறையையும் தனித்தனி மாவட்டங்களாகப்பிரித்து அம்பாறையை திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தால் நிறைத்து முஸ்லீம்களிற்கு இனவிகிதாசார ரீதியில் வஞ்சகமாக பாதிப்பை ஏற்படுத்தியமை, மாவனல்லவின் வன்முறை, மாளிகாவத்தை வன்முறை, தம்புள்ளையில் பள்ளிவாசல் மீதான தாக்குதல், அனுராதபுரத்தில் பள்ளிவாசல் மீதான தாக்குதல், இப்பொழுது மட்டிறைச்சிக்காக மாடு வெட்டக் கூடாதென்பது வரை எப்படித் திட்டமிட்டு அவர்கள் செயற்படுகின்றனர் என்பதை உற்று அவதானியுங்கள். இல்லையென்றால்... பிட்டும் தேங்காய்பூவும்...! எனக் கவிதை எழுதிவிட்டு நாமே எமக்குக் குழிபறிப்பது போல ஆவணங்களைச் சேர்த்து வைப்பது.... இதைத்தவிர வேறு என்ன எழுத? புலிகளைப் பற்றி! நிச்சியமாக அவர்கள் அப்பாவி முஸ்லீம் மக்களைப் படுகொலை செய்தது மிகவும் தவறானது. மனித உரிமை மீறல்.... கொடூரமானது. ஆனால் வடக்கில் கிழக்கைப் போன்று நடக்கக் கூடாதென்பதற்காக முஸ்லீம் மக்களை வெளியேற்றியதைப் போன்ற சம்பவம் ( நானை அதைச் சரியென்று சொல்லவில்லை) உலகில் எந்த இனத்தையும் இடம்பெயரச் செய்கின்றதைப் போல் கொடூரமானதல்ல.. சொத்துக்களை எடுக்க அனுமதிக்கவில்லை. ஆனால் எந்த உயிர்ச் சேதமும் இல்லாமல் எந்தப் பாலியல் வன்புணர்ச்சியும் இல்லாமல் வெளியேற்றப்பட்டதை முஸ்லீம் நன்பர்களே மெச்சிப் பேசியதைக் கேட்டுள்ளேன். எனவே! எதையும் அந்தக் கால களநிலவரத்திற்கு ஏற்றால் போல சரியாக ஆய்வு செய்வது சிறப்பிற்குரியதென நான் கருதுகின்றேன். இறுதியாக எந்தப் படுகொலைகளையும் ஆதரிப்பவன் இல்லை என்பதை நான் பதிவு செய்ய விரும்புகின்றேன். இது ஒரு முழுமையான ஆய்வல்ல ஒரு குறுகிய நேரத்திற்குள் நினைவில் வந்த கருத்துப் பதிவாகும். ஆய்வு நெய்வதென்றால் எல்லாத் தரப்பின் ஆவணங்களும் என்னிடம் உண்டு. அவை அனைத்தும் நினைத்தாலே கொடூரமானவை.

    ReplyDelete
  42. இந்த facebook இல் விடுதலைப்புலிகள் விடுதலைப்புலிகள் என்று கோஷமிடுகின்றனர் சிலர் எனக்கு ஒரே ஒரு சந்தேகம் அந்த வீரர்கள் அப்படி என்ன சாதனை செய்து விட்டார்கள்?
    அவர்கள் முறையாக மக்களை வெளியேற்றிவிட்டு அவர்களின் சண்டையை தொடங்கி இருக்கலாமே ! ஏன் அப்படி செய்யவில்லை அவர்கள் பாதுகாப்புக்காக மக்களை பயன்படுத்தி கொண்டனர் .
    அப்படி பட்ட யுத்தத்தின் கொடுமைகள் தெரிந்தும் இன்னொரு யுத்தம் வேண்டும் என்றும் கோஷமிடுகின்றனர். அவர்கள் நல்லவர்களாக இருந்து இருந்தால் முஸ்லிம் மக்களும் அவர்களுக்கு உதவி இருக்கும். ஒரு பக்க நீதியை பார்க்கும் நீயும் கூட சுயநலவாதிதான் ! ஒன்றை மட்டும் தெரிந்துகொள் ஆயுதம் ஏந்தியவனுக்கு மரணம் அதனால்தான் !

    ReplyDelete
  43. ltte தனி நாடு கேட்பது இதுக்குத்தானா?

    ReplyDelete
  44. முஸ்லீம்கள் தமிழராலும் தமிழர் முஸலீம்களாலும் படுகொலை செய்யப்பட்டது உண்மை தான். அது போன்ற கொடுமைகள் இனியும் நடக்காதிருக்க எப்படி தமிழ்பேசும் சமூகமாக ஐக்கியப்பட்டு அவரவர் தங்களின் உரிமையுடன் வாழலாம் என்பது பற்றியதற்கான கலந்துரையாடலுக்கான வழி உண்டா எனப் பார்க்க வேண்டும். தமிரவும் தமிழின அழிப்புப் போல் முஸ்லீம்களும் சிங்களப் பேரினவாத அரசால் அழிக்கப்பட்டதற்கான பல சம்பவங்கள் உண்டு 1915இல் மட்டுமல்ல 1974 இல் புத்தளப் படுகொலை, 1961 இல் மட்டக்களப்பையும் அம்பாறையையும் தனித்தனி மாவட்டங்களாகப்பிரித்து அம்பாறையை திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தால் நிறைத்து முஸ்லீம்களிற்கு இனவிகிதாசார ரீதியில் வஞ்சகமாக பாதிப்பை ஏற்படுத்தியமை, மாவனல்லவின் வன்முறை, மாளிகாவத்தை வன்முறை, தம்புள்ளையில் பள்ளிவாசல் மீதான தாக்குதல், அனுராதபுரத்தில் பள்ளிவாசல் மீதான தாக்குதல், இப்பொழுது மட்டிறைச்சிக்காக மாடு வெட்டக் கூடாதென்பது வரை எப்படித் திட்டமிட்டு அவர்கள் செயற்படுகின்றனர் என்பதை உற்று அவதானியுங்கள். இல்லையென்றால்... பிட்டும் தேங்காய்பூவும்...! எனக் கவிதை எழுதிவிட்டு நாமே எமக்குக் குழிபறிப்பது போல ஆவணங்களைச் சேர்த்து வைப்பது.... இதைத்தவிர வேறு என்ன எழுத? புலிகளைப் பற்றி! நிச்சியமாக அவர்கள் அப்பாவி முஸ்லீம் மக்களைப் படுகொலை செய்தது மிகவும் தவறானது. மனித உரிமை மீறல்.... கொடூரமானது. ஆனால் வடக்கில் கிழக்கைப் போன்று நடக்கக் கூடாதென்பதற்காக முஸ்லீம் மக்களை வெளியேற்றியதைப் போன்ற சம்பவம் ( நானை அதைச் சரியென்று சொல்லவில்லை) உலகில் எந்த இனத்தையும் இடம்பெயரச் செய்கின்றதைப் போல் கொடூரமானதல்ல.. சொத்துக்களை எடுக்க அனுமதிக்கவில்லை. ஆனால் எந்த உயிர்ச் சேதமும் இல்லாமல் எந்தப் பாலியல் வன்புணர்ச்சியும் இல்லாமல் வெளியேற்றப்பட்டதை முஸ்லீம் நன்பர்களே மெச்சிப் பேசியதைக் கேட்டுள்ளேன். எனவே! எதையும் அந்தக் கால களநிலவரத்திற்கு ஏற்றால் போல சரியாக ஆய்வு செய்வது சிறப்பிற்குரியதென நான் கருதுகின்றேன். இறுதியாக எந்தப் படுகொலைகளையும் ஆதரிப்பவன் இல்லை என்பதை நான் பதிவு செய்ய விரும்புகின்றேன். இது ஒரு முழுமையான ஆய்வல்ல ஒரு குறுகிய நேரத்திற்குள் நினைவில் வந்த கருத்துப் பதிவாகும். ஆய்வு நெய்வதென்றால் எல்லாத் தரப்பின் ஆவணங்களும் என்னிடம் உண்டு. அவை அனைத்தும் நினைத்தாலே கொடூரமானவை.

    ReplyDelete
  45. வெறும் முஸ்லிம்கள் மீது தாக்குதல் என பேசி பேசி காலம் கடத்தும் இந்த கொடூர கோமாளியும் அதன முஸ்லிம் வியாபார மந்திரிகளுளும் இது பற்றியும் பேச வண்டும்..
    கிழக்கு மாகாணத்தில் மோசமான தாக்குதலுக்கு உள்ளான பிரதேசங்களாக வாழைச் சேனை, செங்கலடி ஆரையம்பதி, நீலாவனை, பாண்டிருப்பு முதலானவை காணப்படுகின்றன. குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களால் தமிழ்க் கிராமங்கள் பல அழிவுற்றன. பரம்பரை பரம்பரையாகத் தமிழர்கள் வாழ்ந்து சூறையாடப்பட்டு இன்று சிதைவுக்குள்ளான கிராமங்களாகப் பாலமுனை, பாணமை, மீனோடைக்கட்டு, ஒலுவில், நிந்தவூலீ, சம்மாந்துறை, கரவாகு, தீகவாவி, மாந்தோட்டம், கொண்டா வெட்டுவான், பூரணி, செம்மணிக்குளம், தங்கவேலாயுதபுரம், உடும்பன்குளம் முதலானவை காணப்படுகின்றன. தமிழர்கள் வாழ்ந்தமைக்கான சுவடுகள் துடைத்தழிக்கப்பட்டு இக்கிராமங்கள் இன்று முஸ்லிம் கிராமங்களாக மாறியுள்ளன. இச்சூழலில் அம்பாறை மாவட்டத்தில் படிப்படியாக முஸ்லிம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் தமிழ்க் கிராமங்களாக அட்டைப்பள்ளம், சவளக்கடை, திறாய்க்கேணி, சொறிக்கல்முனை, மீராச்சோலை முதலானவற்றைக் கூறலாம். இப்பூர்வீகக் கிராமங்களில் பிறந்த தமிழர்கள் பலர் இவ்வன்முறையோடு தாக்குதல்களுக்கு உள்ளானவராகவும் தம் சுயமிழந்து அகதி அந்தஸ்து அங்கீகரிக்கப்படாதவராகவும் காணப்பட்டனர். முஸ்லிம் இனவாதக் குழுக்களால் இக்கிராமப் பெண்கள் பலர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதோடு மிலேச்சத்தனமான முறையில் படுகொலையும் செய்யப்பட்டனர்.
    1990களில் திறாய்க்கேணி, நிந்தவூலீ, வீரமுனை முதலான தமிழ்ப் பிரதேசங்களில் முஸ்லிம் தீவிரவாதக் குழுக்களால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் அறத்திற்குப் புறம்பானவை. திராய்க்கேணி பிள்ளையார் கோயிலில் உயிருக்கஞ்சி அடைக்கலம் புகுந்த தமிழ் இளைஞர்கள், யுவதிகளை அடித்தும் வெட்டியும் கொன்ற முஸ்லிம் இனவாதக் குழுக்கள் நிந்தவூர் முருகன் கோவிலில் 64 தமிழர்களையும் வீரமுனைப் பிள்ளையார் கோயிலில் 85 இளைஞர்களையும் படுகொலைசெய்தனர்.தவிர இக்காலப்பகுதியில் ஏராளமான இந்து ஆலயங்கள் சுவடுகள் இன்றி அழித்தொழிக்கப்பட்டன. சம்மாந் துறைக் காளிகோயில், அட்டப்பள்ளம் மீனாட்சியம்மன் கோயில் கல்முனை கரவாகு காளிகோயில் மீனோடைக்கட்டுப் பிள்ளையார் கோயில் ஓட்டமாவடிப் பிள்ளையார் கோயில் எனப் பல இந்துக் கோயில்கள் முஸ்லிம்களால் சிதைக்கப்பட்டுக் கோயில்கள் பள்ளிவாசல்களாகவும் (கரவாகு காளிகோயில்), மாட்டிறைச்சிக் கடைகளாகவும் (ஓட்டமாவடி பிள்ளையார் கோயில்) இன்று மாற்றப்பட்டுள்ளன.

    அது வரை இன ஐக்கியம் முஸ்லிம் தமிழர்களுக்கு இடையில் ஏற்படாது..இது வெறும் சாம்பிள் தான்..முஸ்லிம் தலைமை சுய நலன் தவிர்த்து நேர்மையுடன் செயல்பட முன் வர வேண்டும்...
    அவர்களுக்கு தமிழர்களை விட முஸ்லிம்களுக்கு நேர்மையாக நடக்க பலகை வேண்டும்..

    ReplyDelete
  46. இல்லமியர்களே உங்களிடம் நான் எதிர் பார்ர்க்கும் கேள்வி ஒன்றுதான் நீங்கள் யார் ? உங்கள் அடையாளத்தை தொலைத்து விட்டு மதம் என்ற வெறிக்குள் இருக்கும் வரை உங்களை யார் வந்தும் சரி பண்ண முடியாது.சிங்களவன் பார்வையில் சிறுபான்மை இனம் (தமிழ் பேசும் அனைவரும்). இதை நீங்கள் உணரும் வரை இலங்கைல் பிரிவினைவாதம் இருக்கும். அது சிங்கள ஆதிக்கம் காட்ட்டும் வெறியர்ககளுக்கு சாதகமே! நீங்கள் என்னை இஸ்லாம் மார்க்கத்திட்டு எதிரானவன் என்று நினைத்தால் அதற்கு நான் ஒன்றும் பண்ண முடியாது. இதுதான் யதார்த்தம்.

    ReplyDelete
  47. மீண்டும் முஸ்லிகலை பகடகாய்ளாக்க விடாமட்டோம்
    எங்கள் முன்னோர்கள் செய்த வாரு பகைவன் யாரு நண்பன் யாரு என்று பிரிதரின்ந்து செயல் படுவோம்

    எங்களுக்கு தவயனவற்றை அல்லாஹ்வின் உதவியோடு பெட்ருகொல்லுவோம்.
    எங்களுக்கு இந்த உலகம் பற்றியும் இதில் வால்கின்ர மனிதர்கள் பற்றியும் எங்களுடைய குரானில் சொல்ல பட்டிருக்கு அதன் வலிய்ல் வாழ்ந்து காட்டிய ஏங்களின் நேசத்துக்குரிய முஹம்மது நபி(ஸல்) அவர்களின் வலி வாழ்ந்த சஹாப தோழர்ஹல்லும் காட்டி தந்த வாறு வால்ந்து இன்ஷா அல்லா வற்றி அடைவோம்

    முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கு-

    நீ விரும்புவதை உன் சஹோதரனுக்கு விரும்பாத வரை நீ சுவர்க்கம் நுழைய முடியாது.

    " முளிம்கள் முச்ளிம்கலஹா வாழத வரை அல்லாஹ் அந்த சமூகத்துக்கு கிதாயத் அளிக்கமாடான்"
    நாம் நாமாஹா வாழ்வோம்

    பச்சோந்தி வேசத்தை களைந்து உண்மையான முஸ்லிமாக வாழ்ந்து முஸ்லிம்களுக்கு இளைக்க படுகின்ற கொடுமைகலயும் இன்னல்கலையும் சர்வதேசம் மற்றும் முஸ்லிம் நாடுகளுக்கு தெரிய படுத்தி உங்கள் கடமைகளை சரியஹா செய்து இம்மைலும், மறுமைலும் வெற்றி பெறுங்கள்.

    உங்கள் மீது சுமத பட்டுள்ள பொறுப்பு மிஹவும் உன்னத மானதும் பெறுமதி வாய்ந்ததும் அதை செரியாக பிரயோகிங்கல் .

    ReplyDelete
  48. enna than nenga muslim endu sonnalum nenga pesira moli tamil thanda piraku enna i hate every tamils first u should know what is your language

    ReplyDelete
  49. விடுதலை புலிகளின் இந்த கொடுரத்தை நான் யூடுபில் பேசி வெளியிட இருக்கிறேன்

    ReplyDelete

Powered by Blogger.