Header Ads



இலங்கைஙயில் தங்கத்தின் விலை 5 ஆயிரம் ரூபாவால் உயர்ந்தது


தங்க வர்த்தக சந்தையில் ஒரு பவுண் தங்கத்தின் விலை 5 ஆயிரம் ரூபாவினால் அதிகரித்துள்ளது.

செட்டியார் தெரு உள்ளிட்ட இலங்கை சந்தையில் 22 கரட் தங்கம் ஒரு பவுண் 112,500 ரூபாவுக்கும் 24 கரட் தங்கம் ஒரு பவுண்  121,500க்கும் விற்பனைச் செய்யப்படுகின்றது.

உலக தங்க சந்தையில், ஒரு அவுன்ஸ் தங்கம் 1,818 ஐக்கிய அமெரிக்க டொலருக்கு விற்பனைச் செய்யப்படுகின்றது. கடந்த ஒரு மாதத்துக்குள் 11 டொலர்கள் அதிகரித்துள்ளன.

இலங்கையை பொறுத்தவரையில் கடந்த டிசெம்பர் மாதத்தில் 22 கரட் தங்கம் ஒரு பவுண் 107,800 ரூபாவுக்கும் 24 பவுண் தங்கம் ஒரு பவுண் 116,500 ரூபாவுக்கும் விற்பனைச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.