கட்டாரிடமிருந்து 50 கோடி டொலர்களை கடனாகப் பெறும் இலங்கை
டொலர் பற்றாக்குறையை சமாளிக்க, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு 100 கோடி அமெரிக்க டொலர் கடனாக வழங்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த கடன் பணமாக பெறப்படாமல் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான கடன் வசதியாக பயன்படுத்தப்படும் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எரிபொருள் கொள்வனவுக்கு 50 கோடி அமெரிக்க டொலர்களையும்பரிமாற்றக் கடனாக 40 கோடி அமெரிக்க டொலர்களையும் வழங்க இந்தியாவும் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரியவருகிறது.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் அண்மைய இந்திய விஜயத்தின் போது இந்திய அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலின் பலனாக இந்த கடன் வசதி வழங்கப்படவுள்ளது.
இதேவேளை, அண்மையில் சீனாவிடமிருந்து 150 கோடி அமெரிக்க டொலர் கடனுதவி கிடைத்துள்ளதாகவும், கடனாக ஒரு வருடத்தில் திருப்பிச் செலுத்தும் அடிப்படையில் கட்டாரிடமிருந்து 50 கோடி அமெரிக்க டொலர்களைப் பெறப்பட உள்ளதாகவும் அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிச்சை வாங்கி வாங்கி இந்த நாட்டு மக்களை அடிமைக்கு மேல் அடிமைப்படுத்துவதற்கு இந்த நாட்டுக்கு ஓர் அரசாங்கம் தேவையா? ஒருபுறம் பிரதான கம்பனிகளிடம் கப்பம் வாங்கி அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கண்டபடி விலையேற்றம் செய்து பொதுமக்களை மென்மேலும் கஷ்டத்துக்கு ஆளாக்கும் இந்த அரசாங்கம் பொது மக்களின் குரலைத் துச்சமாக மதித்து அவர்களுக்கு எந்த நிவாரணமோ அத்தியவசிய உதவிகளோ வழங்காது கொள்ளையடிப்பதில் மாத்திரம் மூழ்கியிருக்கும் இந்த அரசாங்கத்தைச் சரியாகத் தண்டிக்குமாறு இறைவனிடம் வேண்டுவதைத் தவிர பொதுமக்களாகிய எம்மிடம் நாட்டை இந்த துன்பங்களிலிருந்து காப்பாற்றுவதற்கு எந்த வழிவகைகளும் இல்லை.
ReplyDeleteபிச்சை வாங்கி வாங்கி இந்த நாட்டு மக்களை அடிமைக்கு மேல் அடிமைப்படுத்துவதற்கு இந்த நாட்டுக்கு ஓர் அரசாங்கம் தேவையா? ஒருபுறம் பிரதான கம்பனிகளிடம் கப்பம் வாங்கி அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கண்டபடி விலையேற்றம் செய்து பொதுமக்களை மென்மேலும் கஷ்டத்துக்கு ஆளாக்கும் இந்த அரசாங்கம் பொது மக்களின் குரலைத் துச்சமாக மதித்து அவர்களுக்கு எந்த நிவாரணமோ அத்தியவசிய உதவிகளோ வழங்காது கொள்ளையடிப்பதில் மாத்திரம் மூழ்கியிருக்கும் இந்த அரசாங்கத்தைச் சரியாகத் தண்டிக்குமாறு இறைவனிடம் வேண்டுவதைத் தவிர பொதுமக்களாகிய எம்மிடம் நாட்டை இந்த துன்பங்களிலிருந்து காப்பாற்றுவதற்கு எந்த வழிவகைகளும் இல்லை.
ReplyDeleteஇந்த கட்டுரையின் தலைப்பு கத்தார் நட்டு கடன் அனால் 90 % செய்தி இந்தியாவை பற்றியதே.
ReplyDelete