கடந்த 2 வருட தவறுகளைச் சரிசெய்து, அடுத்த 3 ஆண்டுகளில் சுய விமர்சனத்துடன் செயற்படுவோம்- ஜனாதிபதி
கடந்த இரண்டு வருடகாலங்களாக ஏற்பட்ட தவறுகளைச் சரிசெய்து அடுத்த மூன்று ஆண்டுகளில் சுய விமர்சனத்துடன் சரியான முறையில் செயல்படுவதற்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவை ஓர் உடன்பாட்டை எட்டியுள்ளது.
ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதியின் முன்மொழிவின் பேரில் இந்த உடன்பாடு எட்டப்பட்டது.
'கடந்த காலத்தில் என்னால் குறைபாடுகள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் அமைச்சர்களாலும் குறைபாடுகள் இருந்திருக்கலாம் என்றும் சுயவிமர்சனத்தின் ஊடாக குறைப்பாடுகளை சரிசெய்து அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஒன்றாக இணைந்து வேலை செய்வோம்” என்று ஜனாதிபதி யோசனை முன்வைத்துள்ளார். TL
Post a Comment