நியூசிலாந்து சம்பவத்தில் எங்களுக்கு பாடம் உள்ளது - அந்நாட்டு பிரதமர் இது இனம், மதம் சார்ந்த விஷயம் அல்ல என்று கூறினார்
பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன இன்று (05) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்துக்கள்.
உலகின் பல்வேறு நாடுகளில் மனித உரிமைகள் பற்றிய விவாதங்கள் உள்ளன. இலங்கையில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக மனித உரிமை பற்றிய தீர்மானங்கள் உள்ளன. 2021 ஆம் ஆண்டு மார்ச் 24 அன்று இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதாக ஒரு தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் பெரும்பாலான தீர்மானங்கள் கடந்த ஒன்றரை வருடங்களாக நடந்த மனித உரிமை மீறல்கள் பற்றியது. யுத்தத்தோடு இது தொடர்பானதாக பலரும் மாறுபட்ட கருத்தைக் கொண்டுள்ளனர்.அது பிழையான புரிதலாகும்.
இந்த அரசாங்கத்திற்கு மூன்று பிரச்சிணைகள் உள்ளன.முதலாவது பொருளாதாரப பிரச்சிணை,இரண்டாவது வைரஸ் பரவல்,மூன்றாவது வெளியுறவுக் கொள்கையைப் பற்றியது. இந்த மூன்று பிரச்சினைகளிலும் அரசாங்கம் முன்வர வேண்டும் என்பதை நாங்கள் அறிவோம். மோசமான அரசாங்க நிர்வாகத்தால் தான் நமது பொருளாதாரம் சரிந்துள்ளது. வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளது என்பது எங்களுக்குத் தெரியும். எமது பொருளாதாரத்தின் சரிவிற்கு கொரோனா வைரஸ் காரணமல்ல.அதற்கு முன்னரே சரிவு ஆரம்பித்து விட்டது.கொரோனா குறித்து கடந்த 2020 மார்ச் மாதமே உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்தது.இதற்கு முன்னரே எமது பொருளாதார சரிவு ஆரம்பித்து விட்டது.
இவற்றை வெற்றி கொள்வது அவசியம். மில்லியனுக்கும் அதிகமான உயிரழிப்புகள் ஏற்படாலம்.அரசாங்கத்தின் மோசமான நிர்வாகத்தால் தான் இந்த நிலைமை ஏற்பட்டது.
வெளியுறவுக் கொள்கையின் அடிப்படையில், ஒரு சுதந்திரமான வெளியுறவுக் கொள்கை பின்பற்றப்பட வேண்டும். அது நாட்டை கட்டியெழுப்ப உதவும் முகமாக இருக்க வேண்டும் மற்றும் அதன் மூலம் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும். மார்ச் மாதம் குறிப்பிடப்பட்டேன்.மனித உரிமைகளை வலுப்படுத்தவும், தவறுகளை விசாரிக்கவும், உள்நாட்டு மனித உரிமை பிரச்சினையை சரிசெய்யவும் இந்த ஆறு மாதங்களில் அரசாங்கம் முடிவுகளை எடுக்க வேண்டும். பெரும்பாலும் என்ன நடக்கிறது என்றால், ஐந்து மாதங்கள் எதுவும் செய்யாமல், இறுதியாக குறியீடாக ஏதாவது செய்வது அர்த்தமற்றது, ஆனால் பொய்யான காரியங்களைச் செய்வது மோசமானது. நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்றால் நாம் போலியான விடயங்களை செய்யாமல் அர்த்தமுள்ள விடயங்களை செய்ய வேண்டும்.
சமீபத்தில் நீதி அமைச்சர் தேசிய நல்லிணக்க மற்றும் ஒற்றுமைக்கான அலுவலகம் என்ற இணையதளத்தைத் திறந்ததைப் பார்த்தோம். போர் முடிந்து 12 வருடங்கள் கழித்துள்ள நிலையில் இணைந்தள உருவாக்கம் என்பதிலுள்ளஅர்த்தம் என்ன? இவை கவனத்தை திசைதிரைப்பும் போலியான விடயங்கள். இது போதுமான விடயங்கள் அல்ல.புனர்வாழ்வ காரியாலயம் வழிகாட்டுதல்கள் ஏற்ப்பாடு தொடர்பான வழிகாட்டல் ஏடு அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. காலம் தாழ்த்தியேனும் நல்ல விடயம் அது.நல்லவற்றை நல்லம் என்றும் கூறிகிறோம்,என்றாலும் அந்த வழிகாட்டல் ஏட்டிலுள்ள குறைபாடுகளை திருத்தி வெளியிட வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.2018 இல் இந்த அலுவலகங்கள் எங்கள் அரசாங்கத்தால் திறக்கப்பட்ட பிறகு, உறுப்பினர்கள் அதற்கு நியமிக்கப்பட்டனர் என்பது எங்களுக்குத் தெரியும். 2021 வரவுசெலவுத் திட்டத்தில் 900 மில்லியன் அதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது, அவற்றில் 800 மில்லயனும் யுத்தத்தின் போது உயிர் இழந்த,சொத்து இழந்தவர்களுக்கு நஷ்ஈடு வழங்குவதற்காகும். அது அவர்களுக்கு நிவாரணம் மற்றும் இழப்பீடு வழங்குவதற்காக. 900 மில்லியனில் 800 மில்லியன் அவர்களுக்கு வழங்கப்படது நஷ்டீட்டுக்காகும். இதனோடு இனைந்து இதே கொள்கையில் மேலும் ஒன்றை சேர்க்கப்பட வேண்டும். அது தான் மனித உரிமைகளை நினைவில் கொள்வது முக்கியம். ஒரு கொள்கையை உருவாக்கும் போது இதை நினைவில் கொள்வது முக்கியம். உதாரணமாக, இரண்டு சிக்கல்கள் உள்ளன. உயிரிழந்தவர்களை நினைவு கூறுவது என்பதாகும்.இது இயற்கையான இயல்பான விடயமாகும், ஆனால் சில நேரங்களில் அது அனுமதிக்கப்படாதுள்ளது என்பதை மனதில் கொள்ள வேண்டும். சிலர் தீபம் ஏற்றுகிறார்கள் விளக்கேற்றுகிறார்கள் இவை இயல்பானது. போரின் முடிவிற்கு 12 ஆண்டுகள் ஆகியும் இந்தப் பிரச்சினைகளை நாம் தீர்க்க வேண்டும்.
கடந்த வாரம் இலங்கையர் ஒருவர் நியூசிலாந்தில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று சுமார் ஐந்து பேரை கொல்ல முயன்றார். அவர்களில் பலர் காயமடைந்தனர். சிலர் ஆபத்தான நிலையில் உள்ளனர். அதில் எங்களுக்கு ஒரு பாடம் உள்ளது. நியூசிலாந்து பிரதமர் இது இனம் அல்லது மதம் சார்ந்த விஷயம் அல்ல என்று கூறினார்.இதனால் இலங்கை சமூகத்தை துன்புறுத்த வேண்டிய அவசியமில்லை என்றார். பயங்கரவாதிகள் எந்த இனம், மதம் அல்லது சாதி என்றாலும் அவர் ஒரு வெறும் பயங்கரவாதி தான்.சிங்கள பயங்கரவாதம், தமிழ் பயங்கரவாதம் மற்றும் முஸ்லீம் பயங்கரவாதம் ஆகியவற்றுக்கு இடையே எந்த வேறுபாடுகட்ட பிரச்சனையும் இல்லை. எல்லாமே பயங்கரவாதம் தான். சிங்கள பயங்கரவாதிகளை ஹீரோக்களாக காட்டி, தமிழ் பயங்கரவாதிகளை நினைவூட்ட முடியாத நிலையை நம்மால் உருவாக்க முடியாது. நாம் மனித உரிமைகள் பற்றி சிந்திக்க வேண்டும், இலங்கையை கட்டியெழுப்ப வேண்டும் என்றால், இனவாதம், மதம், சாதி வெறியை நாம் தேர்கடிக்க வேண்டும், இலங்கையை கட்டியெழுப்ப இவை அனைத்தையும் செய்ய வேண்டும்.
அண்மையில் கிளிநொச்சி பகுதியில் காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் நிறுவப்பட்டதை நாங்கள் பார்த்தோம். இலங்கையில் சுமார் 60,000 காணாமல் போனவர்கள் உள்ளனர். அவர்களில் 5,000 பேர் காவல்துறையில் உள்ளனர். இது போன்ற ஒரு அலுவலகம் திறக்கப்பட வேண்டும் என்பது நிச்சயமாக ஒரு நல்ல விடயம். நாம் அவர்களைப் பார்க்க வேண்டும். ்அங்கு பாலின புரச்சிணைகள் இருந்தால், நாம் அதையும் பார்க்க வேண்டும். அப்படிப்பட்டவர்களுக்கு நாம் சில வழிகாட்டுதல்களையும் நிவாரணங்களையும் கொடுக்க வேண்டும். இவை செய்யப்படாவிட்டால், எங்களுக்கு என்ன நடக்கும் என்றால் பொருளாதாரப் பிரச்சினை ஏற்ப்படும். கடந்த ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு இந்தத் தீர்மானத்திற்கு வந்தபோது, இலங்கை இவற்றிற்கு இணங்கவில்லை என்றால், நாம் ஏன் இலங்கைக்கு சிறப்பு சலுகை அளிக்க வேண்டும் என்று கூறினார்கள். இவ்வாறு பிரமானங்கள் பேனாவிட்டால் நாம் ஏன் ஜிஎஸ்பி பிளஸ் சலுகை தர வேண்டும் என்று கேட்கின்றனர்? பிளஸ் எங்களுக்கு முக்கியம்.
50% அதிகமான ஏற்றுமதிகள் இந்த சலுகை மூலமே மேற்கொள்கிறோம்.சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு இதில் பலன்கள் உண்டு.எதிர்காலத்தில் அமையவிருக்கும் எங்கள் ஆட்சியில் ஜிஎஸ்பி பிளஸ் சலுகை மூலம் சிறிய மற்றும் மத்திய தர வர்க்கத்திற்கே அதிக முன்னுரிமை வழங்க உத்தேஷித்துள்ளோம்.
இன்று மக்கள் தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தும் பொருளாதார பிரச்சனைகள் உள்ளன. 1977 ல் நாங்கள் கேட்டதை நாங்கள் இன்று கேட்கிறோம். சமீபத்தில் ஒரு சூப்பர் மார்க்கெட் அருகே குப்பை தொட்டிகளில் இருந்து மக்கள் உணவு சேகரிப்பார்கள் என்று நாங்கள் நினைக்கவில்லை. ஆனால் அந்த காலாவதியான உணவு பொருள் அங்கிருந்து வந்து போய்விட்டது.மிகவும் வருத்தமாக இருக்கிறது. 1977 களில் இந்த விடயங்களை நாங்கள் கேட்டோம். இன்று மக்கள் வறுமையின் அடிமட்டத்தில் உள்ளனர்.
அரசர்களுக்கு அரசமைக்க உதவிய உற்ற நண்பர்களும் போஷிக்கப்பட்டு மக்கள் வறுமையில் வாடும் நிலை ஏற்ப்பட்டுள்ளது. இந்த அரசாங்கத்தின் இயலாமையால் பொய் மற்றும் மோசடியின் அடிப்படையில் ஒரு பொருளாதாரத்தை உருவாக்க முடியாது. அமைச்சர்கள் பொருளாதாரம் பற்றி பேசுகின்றனர். வேடிக்கையில் பொருளாதாரம் மூழ்கிக் கொண்டிருக்கிறது. இந்த நாட்டில் உணவுப் பற்றாக்குறை இல்லை என்கிறார்கள். மக்கள் தங்களுக்குப் பசி என்று கூறுகிறார்கள். முடிந்தால், இந்த அரசாங்கம் செய்த ஒரு நல்ல காரியம் இருந்தால் என்னிடம் சொல்லுங்கள்.
2020 முதல் இந்த நாட்டில் ஒரு தொற்றுநோய் இருப்பதாக எங்களுக்குத் தெரியும். உலகளாவிய தொற்றுநோய் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு மார்ச் மாதத்தில் கூறியது. 35 மில்லியன் தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது அதனால் 7.5 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கலாம் அப்போது சரியான தடுப்பூசியை சரியான நேரத்தில் வழங்கியிருக்கலாம். நாடு முழுவதும் சீனி மீது இழந்த வரிப் பணத்தைப் பெற்றிருந்தால் தடுப்பூசி போடப்பட்டிருக்கலாம். கடந்த ஆண்டு பெரும்பாலான பாடசாலைகள் மூடப்பட்டன. உலகின் மற்ற நாடுகள் இப்படி மூடவில்லை.
தற்போதய உலகில் இரண்டு நாடுகளில் தான் மனித ஆட்சி இருக்கிறது அதை யும் இஷ்ரேல். இந்திய இரத்த வெறி பிடித்த கூட்ட ங்கள் இல்லாமல் செய்ய போறானுகளே. நாசமா போன இஸ்ரேலுக்கு ம் நாசகார இந்திய யாவுக்கு ம்ம் அழிவே இல்லையா. அப்பாவி கிரீஸ் தவர்களை செப்டம்பர் ல்அமெரிக்கா விலும் ஏப்ரல் இல் இலங்கையில் இலும் என்று இஷ்ரேல் _இந்திய கூட்டணி இந்த உலகில் என்ன ஆட்டம் ஆர்ரானுகள். இப்போது சும்மா அமைதி ஆக இருந்த கனடா. நியூஸ் லாந்து என்று அதிகுதியம் அடிக்கிறானுகள். இறைவா இதற்கு விரைவில் தீர்ப்பு வழங்குவாயாக!
ReplyDeleteதற்போதய உலகில் இரண்டு நாடுகளில் தான் மனித ஆட்சி இருக்கிறது அதை யும் இஷ்ரேல். இந்திய இரத்த வெறி பிடித்த கூட்ட ங்கள் இல்லாமல் செய்ய போறானுகளே. நாசமா போன இஸ்ரேலுக்கு ம் நாசகார இந்திய யாவுக்கு ம்ம் அழிவே இல்லையா. அப்பாவி கிரீஸ் தவர்களை செப்டம்பர் ல்அமெரிக்கா விலும் ஏப்ரல் இல் இலங்கையில் இலும் என்று இஷ்ரேல் _இந்திய கூட்டணி இந்த உலகில் என்ன ஆட்டம் ஆர்ரானுகள். இப்போது சும்மா அமைதி ஆக இருந்த கனடா. நியூஸ் லாந்து என்று அதிகுதியம் அடிக்கிறானுகள். இறைவா இதற்கு விரைவில் தீர்ப்பு வழங்குவாயாக!
ReplyDelete