Header Ads



பிரதமருக்கு ஆதரவாகவும், எதிராகவும் இத்தாலியில் போராட்டம் - ஈஸ்டர் தாக்குதல் விசாரணையை துரிதப்படுத்த கோரிக்கை


பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான இலங்கை குழுவினரின் வருகைக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை (12) இத்தாலியில் பல போராட்டங்கள் நடத்தப்பட்டன.

போலோக்னா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஜி 20 சர்வமத மன்றம் இத்தாலி -2021 இல் கலந்து கொள்ள இந்த குழு கடந்த வாரம் இத்தாலி சென்றது.

இலங்கை தூதுக்குழுவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இத்தாலியில் உள்ள இலங்கையர்கள் குழு, 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து நடத்தப்படும் விசாரணையை துரிதப்படுத்துமாறு அரசாங்கத்தை கேட்டுக் கொண்டது.

இதேவேளை, இலங்கையர்களின் மற்றொரு குழு பிரதமருக்கும் அவரது குழுவினருக்கும் தமது ஆதரவை தெரிவித்தது. 

No comments

Powered by Blogger.