இன்று புதன்கிழமை 8 கொரோனா ஜனாஸாக்கள் நல்லடக்கம்
- நஜிமிலாஹி -
மொத்தமாக 2829 கொரோனா மரணங்கள் "கொரோனா மரணங்களை அடக்கம் செய்யும் மஜ்மா நகரில்" இன்று புதன் கிழமை வரையும் (15.09.2021) அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் 08 முஸ்லிம் ஜனாஸாக்களும் 03 இந்து மரணங்களும் 01 கிறிஸ்தவ மரணமும் இன்றைய தினம் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் சிரேஷ்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் அசனார் அக்பர் தெரிவித்தார்.
இதன்படி 2489 ஆக முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் உயர்ந்துள்ளது. அதேபோன்று 54 கிறிஸ்தவ மரணங்களும் 162 இந்து மரணங்களும் 90 பௌத்த மரணங்களும்மாக இன்றைய தினம் வரையும் மஜ்மா நகரில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
ஒரு இந்திய பிரஜையின் இந்து மரணம், சூடான் நாட்டைச்சேர்ந்த ஒரு முஸ்லிம், மாலைதீவு நாட்டைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் அடங்களாக 03 வெளிநாட்டு மரணங்களும் இதுவரையும் வெளிநாட்டு பிரஜைகளின் மரணங்களாக மஜ்மா நகரில் அடக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment