Header Ads



கௌரியின் மறைவுக்கு இம்தியாஸ் Mp அனுதாபம் - விரைவாக தடுப்பூசியைப் பெற்று பாதுகாப்பாக இருக்கவும் மறக்காதீர்கள் என்கிறார்


ஒரு கனமானான இதயத்துடன் கௌரி மற்றும் தவாவையும் (தவராசா) உங்கள் பிரார்த்தனைகளில் இனணத்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்.

இவர்கள் சாதாரண மக்களின் உரிமைகளுக்கு அச்சமின்றி போராடி வருகின்ற இரண்டு முன்னணி சட்டத்தரணிகள் ஆவர்.

மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்திற்காக இவர்கள் பல சந்தர்ப்பங்களிலும் போராடுவதற்காக ஆஜராகியிருந்தார்கள்.

ஐதேகவுடன் அவர்களுடைய ஆரம்ப ஈடுபாட்டை என் ஆரம்ப அரசியல் ஈடுபாடுகளின் ஒரு பகுதியாகவே நினைவில் வைத்திருக்கிறேன்.

இன்று, கௌரி கொடிய கொரோனா வைரஸால் மரணித்ததோடு தவா அவசர சிகிச்சைப் பிரிவில் உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கிறார்.

உங்கள் பிரார்த்தனைகளில் அவர்களை நினைவுகூரும் அதேவேளை, விரைவாக தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளவும் பாதுகாப்பாக இருக்கவும் மறந்துவிட வேண்டாம்.


இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் 

பாராளுமன்ற உறுப்பினர் 

ஐக்கிய மக்கள் சக்தி

1 comment:

  1. சனாதிபதி சட்டத்தரணி கௌரி தவராசாவின் இழப்பு, இந்த நாட்டில் தமிழ்பேசும் சமூகத்தின் பேரிழப்பாகும்.அதனை ஈடுசெய்யமுடியாது. அதேநேரம் அன்னாரின் கணவர் சட்டத்தரணி தவராசா அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அன்னார் மிக விரைவில் குணமடைந்து திரும்பவேண்டும் என நாம் பிரார்த்திக்கின்றோம். திருமதி கௌரி தவராசா அவர்களின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்தனை செய்கின்றோம்.

    ReplyDelete

Powered by Blogger.