Header Ads



சுவாசப் பிரச்சினையால் மங்கள அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி - மருந்து கொடுத்து உதவினார் சஜித்


கொரோனா தொற்றுக்குள்ளான முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர ஆபத்தான நிலையில் உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள்  தெரிவித்துள்ளன.

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் அவருக்குச் சுவாசப் பிரச்சினை அதிகரிப்பு காரணமாக தற்போது அவர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

2

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி தற்போது  வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர சிகிச்சைப் பெற்று வருகிறார். 

மங்கள சமரவீரவிற்கு சிகிச்சை அளிக்கும் வைத்தியர் அவருக்கு tocilizumab என்ற மருந்தை வழங்க பரிந்துரை செய்துள்ளார். 

சஜித் பிரேமதாஸவும் இந்த மருந்தை பயன்படுத்தி வருவதால் தனக்கென கொள்வனவு செய்த அந்த மருந்தை அரசியல் நண்பரான மங்கள சமரவீரவிற்கு பரிசளித்துள்ளார். 

இது குறித்து உண்மையான நாட்டுப்பற்றாளர்கள் அமைப்பின் உறுப்பினர் சர்மினி நாகஹவத்த முகநூலில் பதிவொன்றை இட்டுள்ளார்.

2 comments:

  1. We pray for his quick recovery...

    ReplyDelete
  2. Don't worry god is very soon quick recovery...............

    ReplyDelete

Powered by Blogger.