Header Ads



நாட்டில் ஒரு மணிநேரத்தில் 3 பேர் வீதம் கொரோனாவால் மரணம் -- இலங்கை வைத்திய சங்கம்


நாட்டில்  கொரோனா வைரஸ் காரணமாக, ஒரு மணித்தியாலத்திற்கு மூன்று பேர் வீதம் உயிரிழக்கும் நிலைக்குத் தள்ளப்படும் என இலங்கை வைத்திய சங்கம் தெரிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பூசி மூலம் மாத்திரம், கட்டுப்படுத்த முடியாது என சங்கத்தின் உப தலைவர் விசேட வைத்திய நிபுணர் மனில்க குணதிலக தெரிவித்துள்ளார். 

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதன் மூலம் டெல்டா வைரஸின் தாக்கத்தை உணர முடிவதாகவும் சிறிது காலமேனும் பயணத்தடை அமுல்படுத்தினால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும் எனவும் விசேட வைத்திய நிபுணர் மனில்க குணதிலக குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.