Header Ads



மேலும் 155 பேர் கொரோனாக்கு மரணம் - 30 வயதிற்குட்பட்ட 3 பெண்களும் அடங்குவர்


நாட்டில் நேற்றைய தினம் (12) 155 கொவிட் மரணங்கள் பதிவாகி உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்... 

இவர்களில் 30 வயதுக்கு உட்பட்ட 3 பெண்களும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,775 ஆக அதிகரித்துள்ளது. 

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 347,500 ஆக அதிகரித்துள்ளது. 

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 304,628 ஆக அதிகரித்துள்ளது.

No comments

Powered by Blogger.