Header Ads



நாட்டில் 118 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழப்பு


நாள் ஒன்றில் பதிவான அதிகப்படியான கொவிட் மரணங்கள் நேற்றைய தினம் பதிவாகி உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். 

அதன்படி, நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 118 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் அவர்உறுதிப்படுத்தினார். 

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,340 ஆக அதிகரித்துள்ளது. 

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 334,939 ஆக அதிகரித்துள்ளது. 

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 298,162 ஆக அதிகரித்துள்ளது.

No comments

Powered by Blogger.