Header Ads



நீதிமன்றம் விடுவித்த பின், பொலிஸாரினால் தனிமைப்படுத்தப்பட்ட மஹாநாம தேரரை விடுவிக்ககோரி ஆட்கொணர்வு மனு


நீதிமன்றம் பிணையில் விடுவித்த பின்னர் பொலிஸார் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திய கொஸ்வத்த மஹாநாம தேரரை உடனடியாக நீதிமன்றில் ஆஜர்படுத்தும்படியும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்க உத்தரவிடக் கோரியும் மாளிகாவத்தை – சமாதி நிறுவனத்தின் தங்கல்லே சாரத தேரர் மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆட்கொணர்வு மனுவொன்றை இன்று தாக்கல் செய்தார்.

இந்த மனுவில் இராஜகிரிய, மிரிஹான மற்றும் தலங்கம பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளும் பத்தரமுல்ல சுகாதார வைத்திய அதிகாரியும் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்டோரும் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.