Header Ads



கொரோனா தொற்றுக்குள்ளான சிங்கம் குணமடைந்தது - மற்றைய சிங்கம் குணமடைந்து வருகிறது


தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான சிங்கம் தற்போது பூரண குணமடைந்துள்ளதாக கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மற்றைய சிங்கமும் குணமடைந்து வருவதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் ஹேமாலி கொத்தலாவல தெரிவித்தார்.

இதனிடையே, தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் ஏனைய விலங்குகளுக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பது விலங்குகளிடையே மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டதாக கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, பின்னவலை திறந்த மிருகக்காட்சி சாலை மற்றும் ஹம்பாந்தோட்டை சஃபாரி பார்க் ஆகியவற்றிலுள்ள விலங்குகளுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிவதற்கு வைத்தியக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் ஹேமாலி கொத்தலாவல குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.