Header Ads



இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளின் விமானங்களுக்கு துருக்கியில் தற்காலிக தடை


இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளிலிருந்து பயணிக்கும் விமானங்களுக்கு, துருக்கி அரசாங்கம் தற்காலிக தடை விதித்துள்ளது.

அந்நாட்டின் உள்துறை அமைச்சு இதுதொடர்பான சுற்றறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளது.

இதன்படி இலங்கை, இந்தியா, நேபாளம், தென்னாப்பிரிக்கா, பிரேசில், பங்களாதேஸ் ஆகிய நாடுகளிலிருந்து பயணிக்கும் விமானங்களுக்கு நாளை முதல் மறு அறிவித்தல் வரையில் துருக்கியில் தரையிறங்க அனுமதியில்லை.

இந்த நாடுகளில் கொவிட் 19 தொற்றாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்படுகின்றமையே இதற்கான காரணமென அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.