Header Ads



100 கிலோ ஐஸ் போதைப் பொருளுடன் 5 பேர் கைது


சபுகஸ்கந்த ரத்கஹவத்தை பிரதேசத்தில் 100 கிலோ கிராம் ஐஸ் ரக போதைப் பொருளுடன் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். 

99 பெக்கெட்டுக்களில் பொதி செய்யப்பட்ட நிலையில் குறித்த ஐஸ் போதைப்பொருள் தொகை மீட்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். 

ஜா-எல, நிவந்தம பிரதேசத்தில் 13 கிலோ கிராம் ஐஸ் ரக போதைப்பொருளுடன் இரண்டு பெண்கள் உட்பட 6 பேர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டனர். 

குறித்த சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார். 

ஹேரோயின் தொடர்பில் சுற்றிவளைப்புக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து ஐஸ் போன்ற போதைப்பொருட்களை இந்நாட்டிற்கு கொண்டு வருவது அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.