Header Ads



ஓட்டுனரை தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது - இன்று நீதிமன்றில் ஆஜர்


பன்னிப்பிட்டிய பகுதியில் வைத்து லொறி ஒன்றின் ஓட்டுனர் ஒருவரை தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். 

குறித்த பொலிஸ் அதிகாரியை நேற்று மாலை முதல் அமுலுக்கு வரும் வகையில் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டதாகவும் அவரை இன்றையதினம் நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

பன்னிபிட்டிய பகுதியில் வீதியில் கடமையாற்றிக் கொண்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் நபரொருவரை தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டிருந்தது. 

மஹரகம பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் லொறி ஓட்டுனர் ஒருவரை தாக்கும் காணொளியை இவ்வாறு பதிவிடப்பட்டிருந்தது.

No comments

Powered by Blogger.