Header Ads



முஸ்­லிம்­க­ளை குறிவைக்கும் ஆதித்­ய­நாத் - தவறான பதையில் சஜித் - அவருக்கு உபதேசம் செய்யுங்கள்


சிங்­க­ளத்தில்: ஜய­தேவ உயன்­கொட, தமிழில்: எம்.எச்.எம் நியாஸ்

‘சமகி ஜன பல­வே­கய’ கட்­சி­யி­னதும் பாரா­ளு­மன்ற எதிர்க்­கட்­சியின் தலை­வ­ரு­மான சஜித் பிரே­மதா­ஸவின் உரை­யொன்று கடந்த வார ஊட­கங்­களில் முதன்மைச் செய்­தி­யாகக் காணப்­பட்­டது. தாம் அதி­கா­ரத்தைப் பெற்றால், உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்­பான பயங்­க­ர­வா­தி­க­ளுக்கும், போதைப் பொருள் விற்­ப­னையில் ஈடு­பட்­டுள்­ள­வர்­க­ளுக்கும் தமது அர­சினால் மரண தண்­டனை வழங்­கப்­ப­டு­மென்­பதே அது. அதற்கு முன்பும் அவர் பல தட­வைகள் இவ்­வாறு பேசி­யி­ருந்­ததை நாம் மறக்க முடி­யாது.

அவ­ரது இக்­க­ருத்து பற்றி ‘சமகி ஜன­ப­ல­வே­கய’ கட்­சியின் உறுப்­பி­னர்­களோ எதிர்க்­கட்­சி­யி­னரோ அலட்­டிக்­கொண்­ட­தாக தெரி­ய­வில்லை. ஆனால் எமது நாட்டின் ஜன­நா­ய­கமும், ஜன­நா­யக நிர்­வாக முறையும், ஜன­நா­யக நிர்­வாக முறையின் நற்­பண்­பு­களை உயர்­வாக மதிக்கும் பிர­ஜை­களும் அர­சியல் மற்றும் சமூக நல­னுக்­காக உழைப்­போரும் சஜித்தின் மேற்­படி கூற்றை விமர்­ச­னத்­திற்கு உள்­ளாக்க வேண்டும். சஜித் ஜன­நா­ய­கத்­துக்கு புறம்­பாக, நடை­ப­யின்ற வண்ணம், மக்­க­ளது உள்­ளங்­களை மகிழ்ச்­சி­யினால் ஊட­றுத்­துச்­செல்லும் வல­து­சாரிக் கொள்­கையை அடி­யொட்­டிய வகையில் செயல்­ப­டு­வதை மக்­க­ளுக்கு எடுத்­துக்­காட்­டு­வது எமது கட­மை­யாகும்.

நாம் மட்­டு­மன்றி ‘சமகி ஜன­ப­ல­வே­க­யவின்’ உறுப்­பி­னர்கள் இது பற்றி அவ­ரிடம் பேசி அவரைத் திருத்த முயற்­சிப்­பது கட்­டா­ய­மாகும். அது ஒரு பாழ­டைந்த அர­சியல் பாதை என்­பதை இங்கு வலி­யு­றுத்திக் கூற வேண்­டி­யுள்­ளது. தேர்­தலில் வெற்றி பெற்­றுக்­கொள்­வ­தற்­காக மக்கள் மத்­தியில் பிர­ப­ல­ம­டையும் ஒரு துரும்பே இது. கடந்த காலங்­களில் வல­து­சாரி அதி­கா­ர­வா­திகள் மற்றும் தேர்­தலின் பின்­ன­ரான ஜன­நா­யக அர­சி­யல்­வா­தி­களின் ஒரு முயற்­சி­யா­கவே இது காணப்­பட்­டது. இது­போன்று வல­து­சாரி அர­சியல் மாற்­று­வ­ழி­களை முன்­வைத்த அர­சி­யல்­வா­தி­க­ளிடம் ஒரு பொதுப்­பண்பு காணப்­பட்­டது. அவ்­வா­றா­ன­வர்கள் சம்­பி­ர­தாய ஜன­நா­யக அர­சியல் கட்­சி­க­ளுடன் மிகக் குறைந்த அளவில் தொடர்­பு­கொண்­டி­ருந்­த­வர்­க­ளாவர் அல்­லது அவற்­றுக்குப் புறம்­பாக அர­சி­ய­லுக்குள் புகுந்­த­வர்­களாவர். அதன் கார­ண­மா­கவே தமது தனிப்­பட்ட புகழ் மற்றும் பெரு­மையின் கார­ண­மாக அர­சியல் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட நிர்ப்­பந்­திக்­கப்­பட்­ட­வர்­க­ளாவர். இதற்­கான மூன்று உதா­ர­ணங்­களை இங்கு முன்­வைக்க முடியும். அமெ­ரிக்­காவின் டொனால்ட் ட்ரம்ப், பிரே­சிலின் கொன்­ஸா­னாரோ மற்றும் பிலிப்­பைன்ஸின் தூதர்த்தே ஆகிய அர­சி­யல்­வா­தி­களே அவர்கள்.

பிலிப்­பைன்ஸின் ஜனா­தி­பதி தூதர்த்­தேயின் அடிச்­சு­வட்டைப் பின்­பற்­றியே சஜித் சென்று கொண்­டி­ருப்­பது நன்கு தெரி­கி­றது. 2016 ஆம் ஆண்டில் பிலிப்­பைன்ஸின் ஜனா­தி­பதி தேர்­த­லின்­போது, தூதர்த்தே நாட்டு மக்­க­ளுக்கு வழங்­கிய மிக ­முக்­கி­ய­மான வாக்­கு­று­தி­யாக ‘பிலிப்­பைன்ஸில் குற்­றங்கள் மற்றும் போதைப் பொருள் வியா­பா­ரத்தில் ஈடு­ப­டு­வோ­ருக்கு கடு­மை­யான தண்­டனை வழங்­கப்­படும்’ என்று காணப்­பட்­டது. அவர் ஏற்­க­னவே ‘நக­ர­பி­தா­வாக’க் கட­மை­யாற்­றிய காலத்தில் குற்­றங்­களைத் தடுக்கும் விட­யங்­களில் புகழ்­பெற்­றி­ருந்த ஓர் அர­சி­யல்­வா­தி­யாவார். அவர் தனது ஆட்­சிக்­கா­லத்தில் நாட்டின் சட்­டங்­களைப் புறக்­க­ணித்­து­விட்டு சட்­டங்­க­ளுக்கு ‘அப்பால்’ செயல்­ப­டு­வ­தற்கு பொலி­சா­ருக்கு அதி­காரம் வழங்­கி­யி­ருந்தார். குற்­ற­வா­ளி­களைக் ‘கண்ட இடத்தில் சுட்­டுத்­தள்ளும்’ முறையை உல­குக்கு அறி­மு­கப்­ப­டுத்­தி­யவர் தூதர்த்­தே­யாவார். எம்­னஸ்டி இன்­ட­நெ­ஷனல் அமைப்பின் அறிக்கை ஒன்­றின்­படி, நீதி­மன்றம் மற்றும் சட்­டங்­க­ளுக்கு அப்பால் சென்ற பிலிப்பைன்ஸ் பொலிசார் சுமார் இரண்­டா­யிரம் பேரை சுட்­டுக்­கொன்­றுள்­ளனர். வழக்­குகள் இன்றி வெறும் சந்­தே­கத்தின் அடிப்­ப­டையில் கைது செய்­யப்­பட்டு, நீதி­மன்ற நடை­மு­றை­களைப் பின்­பற்­றாது, தனி நபர்­களை ‘பச்­சை’­யா­கவே சுட்டுக் கொல்­வது மூலம் மரண தண்­டனை விதிக்கும் ஒரு முறை­யாகும். இது குற்­றங்கள் மற்றும் பயங்­க­ர­வா­தத்தை தடுத்தல் பற்­றிய சஜித் பிரே­ம­தா­ஸவின் எதிர்­கால போக்கும் அர­சியல் மிலேச்­சத்­த­னத்தை நெருங்கும் ஒரு வழி­முறை­தானா என்று அவ­ரிடம் கேட்க வேண்­டி­யேற்­பட்­டுள்­ளது.

அது விடயம் பற்றி தெளி­வு­ப­டுத்­தும்­படி அவரை நிர்ப்­பந்­திப்­ப­தற்­கான விஷே­ட­மான காரணம் என்ன? அதா­வது பொது­மக்­க­ளது வாக்­கு­களால் நாட்டின் அதி­கா­ரத்தைக் கைப்­பற்­று­வ­தற்­காக பொது­மக்­க­ளது உள்­ளங்­களை தூண்­டி­வி­டு­வது போன்று பேசுதல், அந்த அடிப்­ப­டையில் பொது­மக்­க­ளிடம் மனிதத் தன்­மை­யற்ற மனி­தா­பி­மா­னத்­துக்கு எதி­ராக, ஜன­நா­ய­கத்தை முழு­மை­யாக தடை­செய்யும் வகை­யில்தான் அந்த வழி­முறை உள்­ளது. இது தற்­போ­தைய உலகில் அர­சியல் அதி­கா­ரத்தைக் கைப்­பற்­று­வ­தற்­கான புதிய அணு­கு­மு­றை­யாகும்.

இதற்­கான முன்­மா­தி­ரி­களை எமது அண்டை நாடான இந்­தி­யாவில் இருந்தும் பெற்­றுக்­கொள்ள முடியும். இந்­தி­யாவின் உத்­தரப் பிர­தேச மாநி­லத்தின் முதல்­வ­ரான ‘யோகி ஆதித்­யநாத்’ எனும் ஹிந்து மத­குரு இந்­தி­யாவின் பிர­த­ம­ரான நரேந்­திர மோடிக்குப் பின் பத­விக்கு வர முயற்­சிப்­பது நன்கு தெரி­கி­றது. கடந்த சில வரு­டங்­க­ளாக அதற்­கான பின்­ன­ணியை அவர் உரு­வாக்கிக் கொண்டு வரு­கிறார். இந்த அர­சியல் அபி­லா­ஷையை அடை­வ­தற்­காக அவர் பயன்­ப­டுத்தும் மிக முக்­கி­ய­மான ஆயுதம் “முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான கோஷ­மாகும்”. ‘லவ் ஜிஹாத்’ எனும் பெயரில் உத்­தர பிரதேஷ் மாநி­லத்தில் அவர் ஆரம்­பித்த முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இந்த நட­வ­டிக்கை அவ­ரது முயற்­சியின் ஆரம்பக் கட்­ட­மாகும். ‘ஹிந்து யுவ­திகள் முஸ்லிம் இளை­ஞர்­களை திரு­மணம் செய்து கொள்­வது முஸ்­லிம்­க­ளது ஒரு சதித்­திட்­ட­மாகும்’ என்று அவர் ஹிந்து மக்­க­ளி­டையே பிரச்­சாரம் செய்­ய­லானார். அது மட்­டு­மன்றி அவற்றை தடுத்து நிறுத்­து­வ­தற்­காக புதிய சட்­டங்­க­ளையும் அவர் அறி­மு­கப்­ப­டுத்­தி­ய­துடன் பிர­தமர் மோடியும் செய்­யாத வகையில் தமது தனிப்­பட்ட அர­சியல் தனித்­து­வத்தை மேலோங்கச் செய்யும் முக­மாக முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக செயல்­பட ஆரம்­பித்­துள்ளார். அவ­ரது அந்த முயற்சி உத்­தர பிர­தேஷில் மட்­டு­மல்­லாது வடக்கு மற்றும் மேற்கு இந்­தி­யாவில் ஹிந்து மாநி­லங்­களில் வெற்­றி­க­ர­மாக மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கி­றது. இது போன்ற அர­சியல் முயற்­சிகள் மூலம் ஒரு புதிய எதி­ரியை உரு­வாக்க முடியும்.

சஜித் பிரே­ம­தாஸ அவர்கள் ‘யோகி ஆதித்­யநாத்’ போன்ற ஒரு­வ­ராக இல்­லைதான். எனினும் அரசினால் வழங்­கப்­படும் மரண தண்­டனை பற்­றிய அவ­ரது நோக்கு ஆதித்­ய­நாத்தின் ‘லவ் ஜிஹாத்’ மற்றும் தடுத்து நிறுத்தும் முயற்சி போன்ற வல­து­சா­ரி­களைக் கவரச் செய்யும் அர­சி­யலின் புதிய தோற்­ற­மொன்று எமது நாட்டில் உரு­வா­வ­தற்கு இட­ம­ளிக்க முடியும். தான் கோத்­தா­பய ராஜ­ப­க்ஷவை விடவும் கடும் சித்­த­மு­டைய மனோ­தி­ட­முள்ள, அசைந்து கொடுக்­காத, கடு­மை­யான முடி­வு­களை எடுக்கத் தயங்­காத ஒரு தலைவர் என்று மக்­க­ளுக்குக் காண்­பிப்­ப­தற்­காக சஜித் முயற்சி செய்யப் பார்க்­கிறார் போலும். இது போன்ற விட­யங்கள் அர­சியல் ரீதி­யாக துர­திஷ்­ட­மா­னது மட்­டு­மன்றி அது நடை­பெ­றக்­கூ­டாத விட­யங்­க­ளாகும். இலங்­கைக்குத் தேவைப்­ப­டு­வ­தெல்லாம் கோத்­தா­பய ராஜ­ப­க்ஷ­வை­வி­டவும் கடு­மை­யான போக்கைக் கொண்ட ஒரு ஆட்­சி­யாளர் அல்ல. ஆனால் அது­போன்ற தலை­மைத்­து­வத்தை வெறுக்­கக்­கூ­டி­ய­வரும் நடு­நி­லை­ப் போக்கைக் கொண்­டதும், இலகு மனம் படைத்த ஜன­நா­ய­க­வா­தி­யையே மக்கள் எதிர்­பார்க்­கின்­றனர். அவர் மரண தண்­டனை வழங்­குவேன் என்று பெரு­மை­யுடன் பேசும் ஒரு தலை­வ­ராக இருக்­கவே கூடாது. அது பற்றி வெட்­கப்­படக் கூடிய, அதை செவி­யுற்­றதும் அதிர்ச்­சி­ய­டையக் கூடிய அதை ரத்துச் செய்வேன் என்று வாக்­கு­று­தி­ய­ளிக்கும் அளவில் அத்­த­லைவர் மனி­தா­பி­மானம் கொண்­ட­வ­ராகத் திகழ வேண்டும்.

தம்­மிடம் இப்­ப­டி­யான பண்­பு­கள்தான் இருப்­ப­தாக சஜித் கூறு­கின்றார். அவ­ருக்கு உப­தே­சிப்போர் நாட்டில் மனி­தா­பி­மான அடிப்­ப­டையில் அர­சியல் கலந்­து­ரை­யா­டல்­களை நடத்­த­வேண்­டு­மென அவரிடம் கூறிவையுங்கள்.

தற்­போது இலங்கை, இந்­தியா, பங்­க­ளாதேஷ், பாகிஸ்தான், மியன்மார், தாய்­லாந்து மற்றும் சீனா போன்ற நாடு­களில் அர­சியல் கட்­சி­களும் அர­சு­களும் மனி­தா­பி­மா­ன­மற்ற நிலையில் செயல்­ப­டு­கின்­றன. அந்த ஒவ்­வொரு நாடு­க­ளிலும் மனி­தா­பி­மா­ன­மற்ற நிலை வெவ்­வேறு தரங்­களில், தன்­மை­களில் செயல்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. இந்த நிலையில் சீனா, மியன்மார் மற்றும் இந்­தியா ஆகிய நாடுகள் முன்­னணி வகிக்­கின்­றன. இலங்­கையும் ஒரு காலத்தில் அதே நிலையில் முன்­ன­ணியில் இயங்கி வந்­தபின் கடந்த சில வரு­டங்­களில் மனி­தா­பி­மான நிலைக்கு மாறி­யுள்­ளது. எனினும் அந்த நிலை மீண்டும் பழைய நிலைக்குச் செல்லும் மோச­மான வாய்ப்பும் உண்டு. இந்த சூழ்­நி­லையை மாற்­றி­ய­மைக்கும் தீவிர முயற்­சியில் இயங்­கு­வது எதிர்க்­கட்சித் தலை­வரின் கட­மை­யாகும். அதற்­காக வேண்டி முதிர்ச்­சித்­தன்­மை­யு­ட­னான ஜன­நா­யக அரசியல் அறிவையும் திறனையும் அவர் தம்மிடம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

நன்றி – அனித்தா பத்திரிகை – Vidivelli

No comments

Powered by Blogger.