அப்வானின் தாய், தந்தையிடமிருந்து மரபணு மாதிரிகள் பெறப்பட்டன - 9 பேரிடம் வாக்குமூலம்
- TM -
கொஹூவல பகுதியில் காரொன்றில் இருந்து எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலத்தில் இருந்து மரபணு சோதனையை முன்னெடுக்க தேவையான மாதிரிகள் இன்று -12- பெற்றுக்கொள்ளப்பட்டன.
மீட்கப்பட்ட சடலம் மற்றும் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படும் வர்த்தகரின் தாய், தந்தையின் மாதிரிகள் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
அத்துடன், PCR சோதனைக்கு தேவையான மாதிரிகளும் பெறப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், பெறப்பட்ட மாதிரிகளினூடாக மேற்கொள்ளப்படும் பரிசோதனை முடிவுகள் கிடைத்ததன் பின்னர் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் 9 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
NERUPPIL PATHIA SHAAMBALIL
ReplyDeleteP C R. VEDIKKAIYAI IRUKKIRSTHU.
Hazbiyallah-Almighty Allah is enough
ReplyDelete