Header Ads



மேல் நீதிமன்ற நீதிபதியாக, MM மொஹமட் மிஹால் பதவி உயர்வு


- இஸ்மதுல் றஹுமான் -

கொழும்பு நீதவான் நீதிமன்ற பிரதான நீதவானாக பதவி வகித்த எம்.எம். மொஹமட் மிஹால் மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக் கடிதத்தை இன்று 10 ம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ வழங்கி வைத்தார்.

2006 பெப்ரவரில் நீதிச் சேவைக்கு தெரிவு செய்யப்பட்ட நீதவான் மொஹமட் மிஹால் இரத்தினபுரி, புத்தளம், மொரட்டுவ, கல்கிஸ்ச, நுகேகொட ஆகிய நீதவான் நீதிமன்றங்களில் கடமையாற்றியதுடன்

இறுதியாக கொழும்பு நீதவான் நீதிமன்ற பிரதான நீதவனாக கடமையாற்றினார்.

No comments

Powered by Blogger.