மத்ரசா அதிபரை கைது செய்யுமாறு, சட்டமா அதிபர் அறிவுறுத்தல்
- அததெரண -
மத்ரசா பாடசாலையின் அதிபர் மொஹமட் சகீல் என்பவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை, மத்ரசா பாடசாலையின் அதிபரை கைது செய்யுமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்விற்கு உதவிய சந்தேகத்தின் பேரில் அவரை இவ்வாறு கைது செய்யுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு செயலாளர் அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
இவருக்கு மதரஸா அதிபரைக் கைது செய்வதில் உள்ள அவசரம், ஏன் மத்திய வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட புகழ்பெற்ற கள்வர்களைக் கைது செய்து நீதிமன்றத்துக்கு அனுப்பும் எந்த அவசரமோ சிரத்தையோ இல்லை அது ஏன்?
ReplyDelete