Header Ads



ஜெயசூரியவுக்கு கொரோனா, தடுப்பூசி செலுத்தப்பட்டது ஏன்..?


இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத்ஜெயசூரியவிற்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டமை குறித்து ஆராய்ந்து வருவதாக இராணுவதளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.

சனத்ஜெயசூரியவிற்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்பட்டதை காண்பிக்கும் படங்கள் வெளியானதை தொடர்ந்து கரிசனைகள் வெளியாகியுள்ளன.

சனத்ஜெயசூரியாவிற்கு எதன் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்பட்டது என வினவப்பட்டவேளை இந்த விடயம் குறித்துஆராய்ந்துவருவதாக இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.

அதிகளவு பாதிக்கப்படக்கூடிய பகுதி என தெரிவு செய்யப்பட்ட பகுதியில் சனத்ஜெயசூரிய வாழ்ந்திருந்தால் அவரை அதிகாரிகள் தெரிவு செய்திருக்கலாம் என இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.

முன்னிலை பணியாளர்கள் இராணுவத்தினர் பொலிஸார் பொதுமக்களுடன் நெருக்கமான தொடர்பில் இருப்பவர்கள் பாதிக்கப்படக்கூடியவர்கள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.