Header Ads



தங்கையின் திருமணத்தில் உயிரிழந்த அண்ணன், PCR நெகட்டிவ் ஆனது - மரணத்திற்கு மாரடைப்பே காரணமாம்


கொழும்பு பிலியந்தல பிரதேசத்தில் தங்கையின் திருமண நிகழ்வில் அண்ணன் உயிரிழந்த பரிதாபகரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த 25ஆம் திகதி இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவரின் பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கை வெளிவந்துள்ளது.

இதில் அவருக்கு கொரோனா இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 25ஆம் திகதி தங்கையின் திருமணம் முடிந்த நொடியிலேயே மணமகளின் மூத்த சகோதரன் திடீரென கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

கடவத்தை -மஹர பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய மூன்று குழந்தைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுவதோடு இவரது மரணத்திற்கு மாரடைப்பே காரணம் என்றும் கூறப்படுகின்றது.

No comments

Powered by Blogger.