சீன பெட்டிகளுடன் கூடிய, ரயில்களை ஓட்டமாட்டோம் - சாரதிகள் தீர்மானம்..!
சீன பெட்டிகளுடன் கூடிய தொடருந்துகளை செலுத்துவதில் இருந்து விலகுவதற்கு தொடருந்து சாரதிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
தொடருந்து இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட இதனைத் தெரிவித்துள்ளார்.
சீன பெட்டிகளுடன் கூடிய 100 தொடருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டு தரித்து வைக்கப்பட்டு உள்ளன.
கடன் உதவியின் கீழ் சீனாவில் இருந்து இவை இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இவற்றுக்கு தொடர்ந்தும் பொது மக்களின் பணத்தின் ஊடாகவே கடன் செலுத்தப்பட்டு வருகின்றது.
எனினும் குறித்த தொடருந்துகள் இதுவரை சேவையில் இணைக்கப்படவில்லை.
நிர்வாகம் உரிய முறையில் செயற்படாமை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் சீன பெட்டிகளுடன் கூடிய தொடருந்துகளை செலுத்துவதில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக தொடருந்து இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment