Header Ads



தம்மிக்கவின் பாணியை பருகியும், கொரோனா தொற்றுக்குள்ளான அரசியல்வாதி



கேகாலை தம்மிக்க பாணியை அருந்திய தாம் உள்ளிட்ட குடும்ப 
உறுப்பினர்கள் அனைவருக்கும் கொவிட் 19 தொற்றுறுதியானதாக கேகாலை பிரதேச சபையின் ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணி உறுப்பினர் சிலந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

தொலைபேசி ஊடாக Hiru செய்தி சேவைக்கு இதனை தெரிவித்துள்ளார்.

அவர் தற்போது எம்பிலிபிட்டியவில் உள்ள இளைஞர் படையணி மத்திய நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக Hiru செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

இதேவேளை, கேகாலை பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவருக்கும் தம்மிக்க பாணியை அருந்திய பின்னர் கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

10 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தி தம்மிக்க பாணியை கொள்வனவு செய்து அருந்திய போதும் தாம் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக எமது செய்தி பிரிவிற்கு அவர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.