Header Ads



கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஓட்டமாவடியில், இன்றுமுதல் சகல பள்ளிவாசல்களும் பூட்டப்படுகிறது


(எச்.எம்.எம்.பர்ஸான்)

ஓட்டமாவடி பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவலை கட்டுப்படுத்த குறித்த பிரதேசத்திலுள்ள அனைத்துப் பள்ளிவாசல்களையும் இன்று (5) முதல் தற்காலிகமாக மூடி வைக்குமாறு சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் இன்று (5) மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளின் போது கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டி முஸ்லிம் விவகார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் எமது பிராந்திய உத்தியோகாத்தர்களின் தீர்மானத்துக்கு அமைய பள்ளிவாசல்களை மறு அறிவித்தல் வரை மூடி வைக்குமாறு பள்ளிவால்கள் நிர்வாகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்று சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.