Header Ads



இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர் தங்கியுள்ள ஹோட்டலின் 2 பணியாளர்களுக்கு கொரோனா


இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர் தங்கியுள்ள ஹோட்டல் ஒன்றின் இரு பணியாளர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்

காலி, டடெல்ல பகுதியிலுள்ள ஒரு ஹோட்டலின் இரண்டு பணியாளர்களுக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதாக காலி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் இன்று(15) உறுதிப்படுத்தியுள்ளது.

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இலங்கை – இங்கிலாந்து டெஸ்ட்போட்டிகளின் போது இங்கிலாந்து கிரிக்கெட்அணி வீரர்கள் இந்த ஹோட்டலில் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹோட்டலின் சமையலறையில் பணிபுரியும் குறித்த இரு பணியாளர்களும் ரத்கம, வெலிகமவைச் சேர்ந்தவர்கள் என்றும் இன்று இவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.