Header Ads



வெள்ளை யானையிடம் வேலை வாங்கமுடியாது, எனவே மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டாம்


மாகாணசபை என்பது வெள்ளையானை. அதனிடம் வேலை வாங்கமுடியாது எனவே மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டாம் என முக்கியமான பௌத்த பீடங்களில் ஒன்றான மல்வத்துபீடம் வலியுறுத்தியுள்ளது.

மல்வத்து பீடத்தின் அனுநாயக்கர் திம்புல்கும்புரே விமலதர்ம தேரர் இந்த விடயத்தினைக் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

“மாகாணசபை என்பது வெள்ளையானை. அதனிடம் வேலை வாங்கமுடியாது” மாறாக உணவுகளை மாத்திரமே வழங்கிக்கொண்டிருக்க வேண்டும். அவ்வாறானதொரு நிலைமை எமது நாட்டுக்கு தேவையில்லை.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ, இன்று மக்கள் வாழும் பகுதிகளுக்கு நேரில் சென்று பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கிவருகின்றார்.

எனவே, மாகாணசபைகள் வேண்டாம். அதற்கான தேர்தலை நடத்த வேண்டாம் என மகாநாயக்க தேரர்களின் சார்பில் கோரிக்கை விடுக்கின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.