Header Ads



வபாத்தான 20 நாள் குழந்தையின் பெற்றொருக்கு, கொரோனா இல்லை - வைத்தியசாலை பணிப்பாளரும் உறுதிப்படுத்தினார்


COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்ட, பிறந்து 20 நாட்களேயான சிசு சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளது.

கொழும்பு -15 முகத்துவாரம் பகுதியை சேர்ந்த சிசு ஒன்றே COVID-19 தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஜீ.விஜயசூரிய குறிப்பிட்டார்.

கொரானா தொற்றுக்குள்ளான குறித்த சிசு இன்று காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சிசுவின் தாய்க்கும் தந்தைக்கும் COVID-19 தொற்று ஏற்படவில்லை என சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஜீ.விஜயசூரிய தெரிவித்தார்.


No comments

Powered by Blogger.