மரணங்களின் எண்ணிக்கை 160 ஆக உயர்வு
இன்றைய தினம் மூன்று கொவிட் மரணங்கள் தொடர்பிலான தகவல்களை அரசாங்கத் தகவல் திணைக்களம் சற்று முன்னர் வெளியிட்டுள்ளது.
1. கொலன்னாவ பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதான பெண் ஒருவர் ஹோமகம வைத்தியசாலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். சிறுநீரக செயலிழப்பு மற்றும் கொவிட் நிமோனியா காரணமாக அவர் உயிரிழந்துள்ளார்.
2. கொழும்பு 9 பிரதேசத்தைச் சேர்ந்த 78 வயதான ஆண் ஒருவர் கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்துள்ளார். இரத்தம் விசமாகுதல், உடல் பாகங்கள் செயலிழந்தமை போன்ற காரணிகளினால் அவர் உயிரிழந்துள்ளார்.
3. பண்டாரகம பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதான பெண் ஒருவர் ஹோமகம வைத்தியசாலையில் இன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா, இரத்தம் விசமாகியமை மற்றும் அதிர்ச்சி காரணமாக இந்த நபர் உயிரிழந்துள்ளார்.
சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் அரசாங்கத் தகவல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
Post a Comment