அலுவலக ரயில்கள் நாளை முதல் சேவையில்…!
அலுவலக ரயில்கள் நாளை (23) முதல் சேவையில் ஈடுபடும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை கடுமையான பின்பற்றி சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.
எனினும், அலுவலக ரயில்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள ரயில் நிலையங்களில் நிறுத்தப்படமாட்டாது.
இதற்கிணங்க பிரதான ரயில் மார்க்கத்தில் பயணிக்கும் ரயில்கள் மருதானை, தெமட்டகொட, களனி, வனவாசல, ஹொரணை, ராகம, வல்பொல மற்றும் பட்டுவத்த ரயில் நிலையங்களில் நிறுத்தப்படமாட்டாது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிலாபம் ரயில் மார்க்கத்தில் பயணிக்கும் ரயில்கள் மருதானை, தெமட்டகொட, களனி, வனவாசல, ஹொரணை, ராகம, பேரலந்த, குரண, நீர்கொழும்பு மற்றும் கட்டுவ ரயில் நிலையங்களில் நிறுத்தப்படமாட்டாது.
மருதானை மற்றும் பேஸ்லயின் வீதி ரயில் நிலையங்கள் தவிர களனிவௌி மார்க்கத்தில் நாளை முதல் அலுவலக ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.
கரையோர ரயில் மார்க்கத்தில் பாணந்துறை, களுத்துறை தெற்கு, அளுத்கம, ஹிக்கடுவ, காலி, மாத்தறை மற்றும் பெலிஅத்த ரயில் நிலையங்கள் வரை சேவை இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
Post a Comment