Header Ads



வீடுகளில் நடக்கும் மரணங்களை, பதிவுசெய்ய PCR அறிக்கை கட்டாயம்


கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து காலம் குறையும் வரை வீடுகளில் நடக்கும் மரணங்களை பதிவு செய்வது சம்பந்தமாக பதிவாளர் நாயகம் புதிய நடைமுறைகளை அறிவித்துள்ளார்.

கிராம சேவகர் மரணம் தொடர்பான அறிக்கை வழங்கும் போது, அந்த மரணம் கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பது இந்த நடைமுறையாகும்.

ஒருவர் இறந்தால், அந்த மரணம் கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதுடன், வீடுகளில் நடக்கும் மரணங்களுக்கு கிராம சேவகரின் அறிக்கை அல்லது மருத்துவ அறிக்கைக்கு மேலதிகமாக PCR பரிசோதனை அறிக்கைகளையும் பிறப்பு மற்றும் இறப்பு தொடர்பான பதிவுகளை மேற்கொள்ளும் பதிவாளர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் பதிவாளர் நாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.