Header Ads



இலங்கையில் கொரோனா மரணங்கள் 90 ஆக அதிகரிப்பு - இன்று 3 பேர் உயிரிழப்பு


இலங்கையில் மேலும் 3 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். 

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது. 

2 பெண்கள் மற்றும் ஆண் ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

ஹெயியன்துடுவ பிரதேசத்தை சேர்ந்த 86 வயதுடைய பெண் ஒருவரும், கொழும்பு 15 பிரதேசத்தை ​சேர்ந்த 60 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் கொழும்பு 14 பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.