Header Ads



புத்தளம் மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 71 ஆக உயர்வு


புத்தளம் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 71ஆக உயர்வடைந்துள்ளதாக, மாவட்டத்தின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் தினுஷா பெர்ணான்டோ தெரிவித்தார்.

இதற்கமைவாக தங்கொட்டுவ பிரதேசத்தில் 8 பேரும் வென்னப்புவவில் 13, நாத்தாண்டிய 10, மஹவௌ 3, ஹலாவத 10, ஆராச்சிக்கட்டுவ 6, முந்தலம் 2, புத்தளம் 3, கல்பிட்டிய 10, கருவலகஸ்வௌ 2, ஆனமடுவ 1, பல்லம 2, மாதம்பையில் 1 தொற்றாளரும் இனங்காணப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

தொற்றுக்குள்ளானவர்கள் மாவட்டத்திலுள்ள மற்றும் வெளிப்பிரதேசங்களிலுள்ள கொரோனா சிகிச்சை மத்திய நிலையங்களில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார். 

தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட பிரதேசங்கள் எவையும் இதுவரை முடக்கப்படவில்லை என்றும் தொற்றாளர்களின் குடும்பங்கள் உள்ளடங்களாக 1,500 பேர் அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.