Header Ads



30 ஆவது கொரோனா மரணம் - 23 வயது முஸ்லிம் இளைஞர்


இலங்கையில் 30 ஆவது கொவிட் 19 மரணம் பதிவாகியுள்ளதாக சற்றுமுன்னர் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் வைத்திய அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார். 

23 வயதுடைய கொழும்பு 15, முகத்துவாரம் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் (05) குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளான். 

நீரிழிவு நோயுடன் கொவிட் 19 தொற்று ஏற்பட்டமை காரணமாக இந்த மரணம் சம்பவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறித்த 23 வயது இளைஞர், முஸ்லிம் இளைஞர் என ஆசாத் சாலி குறிப்பிட்டார்.





2 comments:

Powered by Blogger.