விஜயதாச ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதம்
20வது திருத்தம் குறித்த தனது கரிசனைகளை குறிப்பிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
பொதுமக்களின் இறைமையை மதிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் 20வது திருத்தத்திற்கான ஆதரவை வழங்குவதா என்பது குறித்து குழப்பமான நிலையில் உள்ளதாக விஜயதாச ராஜபக்ச அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
19வது திருத்தத்தில் காணப்படும் தவறுகளை சரிசெய்வதற்காக அரசாங்கம்முன்னெடுக்கவேண்டிய விடயங்களையும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment