Header Ads



குருநாகலில் இருவருக்கு கொரோனா


மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்த  இருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.


 இவர்களுக்கு குருநாகல் போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் போது, இந்த விடயம் தெரியவந்துள்ளது.


குறித்த தொற்றாளர்கள் இருவரும் நேற்று உறுதிப்படுத்தப்பட்ட பெண்ணுடன் நெருக்கமாகப் பழகியவர்கள் என, குருநாகல் போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் சந்தன கெதன்கமுவ தெரிவித்துள்ளார்.


இவர்கள் இருவரும் நாரம்மல- கல்ஹிட்டியாவ மற்றும் குளயியாப்பிட்டிய நக்காவத்த பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இவர்கள் மேலதிக சிகிச்சைக்காக பொரளை ஐ.டி வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.