Header Ads



நாட்டின் சகல பகுதிகளில் இருந்தும் நோயாளர்கள் - அடுத்த வாரம் மிகவும் முக்கியம்


நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் நோயாளர்கள் இனம் காணப்படுவதால் அடுத்த வாரம் மிகவும் முக்கியமானது என இராணுவதளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொட ஆடைதொழிற்சாலையை சேர்ந்த நோயாளிகள் நாட்டின் 16 மாவட்டங்களில் இனம் காணப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆடைதொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்கள் இனம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.

எனினும் எவராவது கண்டுபிடிக்கப்படாமலிருந்தால் அவர்கள் அடுத்தவாரம் கண்டுபிடிக்கப்படுவார்கள் என இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக பணியாளர்கள் ஐவரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.