தேங்காயின் விலை ரூ.200 -250 வரை அதிகரிக்கும் – நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் எச்சரிக்கை
தேங்காய் எண்ணெய் மீதான வரி அதிகரிப்பது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டால் நுகர்வோருக்கு சுத்தமான தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்த முடியாமல் போவதுடன் எதிர்வரும் காலங்களில் தேங்காய் ஒன்றின் விலை 200 ரூபா முதல் 250 ரூபா வரை உயரும் அபாய நிலை உருவாகும் என்று நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதைக் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் –
கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ஸ, தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் என தங்களை அடை
யாளப்படுத்தியுள்ள போலிக் கும்பலொன்றின் பேச்சுகளைக் கேட்டுக்கொண்டு இறக்குமதி செய்யும் தேங்காய் எண்ணெய் மீதான வரி அதிகரிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை எதிர்வரும் திங்கட்கிழமையன்று வெளியிடவுள்ளார்.
உண்மையில், இது எந்த விதத்திலும் நாட்டுக்கு நன்மை பயக்காத ஒரு விடயமாகும். ஏனெனில், இறக்குமதி செய்யப்படும்
தேங்காய் எண்ணெய் மீதான வரி அதிகரிப்பின் முன்னணியில் மறைமுகமாக பாரிய குளறுபடிகள் உள்ளன.
தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் என கூறிக்கொண்டுள்ள இந்தக் கும்பல் பாம் எண்ணெயுடன் தேங்காய் எண்
ணெயைக் கலந்து சந்தைப்படுத்தும் வேலையில் ஈடுபட்டு வருகின்றது.
‘பொல் குருட்ட’ என்ற தேங்காயின் ஒரு பகுதியைப் பயன்படுத்தி அதனுடன் எண்ணெய்த் தன்மையான பதார்த்தமொன்றை கலந்து பாம் எண்ணெய்யுடன் கலவை செய்து விற்பனை செய்வதே இந்த மோசடிக்கும்பலின் கள்ளத்தனமாகும். இதனால் பாவனை யாளர்களுக்கு சுத்தமான தேங்காய் எண்ணெய் கிடைக்காது போகும்.
இந்த நடவடிக்கையால் சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 200 ரூபா முதல் 250 ரூபா வரை அதிகரிக்கும் அபாய நிலை உருவாகும் என்றார்.
Post a Comment