மினுவங்கொட தொழிற்சாலை மூலம் 1083 பேருக்கு கொரோனா,, எனினும் சமூகத்தில் இதுவரை உறுதி செய்யப்படவில்லை
மினுவங்கொட கைத்தொழில்சாலையில் இனங்காணப்பட்ட கொரோனா கொத்தணியின் தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தவரி சமூகத்தில் இருந்து இதுவரையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர தெரிவித்துள்ளார்.
இன்று -10- தெரண அருண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுவரையில் 1083 பேர் மினுவங்கொட கொத்தணியில் கொரோனா தொற்று உறுதியாக நிலையில் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த தொற்றாளர்களுடன் தொடர்பில் இருப்பவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment