Header Ads



பாராளுமன்றத்திற்கு வந்த மரண தண்டனைக் கைதி பிரேமலால் ஜயசேகர


சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் இன்று (08) பாராளுமன்றம் ஒன்றுகூடவுள்ளது. 


இன்று பிற்பகல் 1 மணிக்கு செப்டம்பர் மாதத்திற்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளதுடன் இன்று மாலை 6.30 மணி வரையில் பாராளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளது. 


இன்று முதல் எதிர்வரும் 11 ஆம் திகதி வரையில் பாராளுமன்றம் ஒன்றுகூடவுள்ளது. 


இன்றைய தினம் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக விளக்கமறியலில் உள்ள பிரேமலால் ஜயசேகர சற்று முன்னர் பாராளுமன்ற வளாகத்திற்கு வருகை தந்துள்ளார். 


அத்துடன் இன்றைய தினம் அவர் பாராளுமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் செய்யவுள்ளார். 


மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அனுமதியின் அடிப்படையில் அவர் இன்று பாராளுமன்றத்தில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.