Header Ads



விஜயதாசவும் இராஜாங்க அமைச்சை நிராகரித்தாரா..? இறுதி நேரத்தில் நடந்த இழுபறி

கண்டியில் இன்று நடைபெற்ற அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்வில் இராஜாங்க அமைச்சராகப் பதவியேற்பதற்குப் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ தனக்கு ஒதுக்கப்பட்ட அமைச்சை நிராகரித்துவிட்டு, தலதா மாளிகைப் பகுதியிலிருந்து வெளியேறிச் சென்றதாக ஆங்கிய இணையத்தளம் ஒன்று தெரிவிக்கின்றது.


விஜயதாச ராஜபக்‌ஷவுக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருந்த போதிலும் இன்று காலை கண்டிக்கு வந்த விஜயதாச ராஜபக்‌ஷ இதனைத் திட்டவட்டமாக நிராகரித்துவிட்டு அங்கிருந்து வெளியேறிவிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


அதனால், இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ முன்பாக 40 இராஜாங்க அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், 39 இராஜாங்க அமைச்சர்கள் மட்டுமே பதவிப் பிரமாணம் செய்திருந்தார்கள்.

No comments

Powered by Blogger.