Header Ads



பதவி விலகுகிறார், மஹிந்த தேசப்பிரிய


தமது பதவிக்காலம் முடிவடை வதற்கு முன்னரேயே பதவி யிலிருந்து விலகுவதாக மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலை வர் மஹிந்த தேசப்பிரிய தேர்தல் பணிகளில் கடந்த 37 வருடங்களாக பணியாற்றிய நிலையில் எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதியன்று தமது பதவியி லிருந்து விலகவுள்ளார்.

தமது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னரேயே பதவி யிலிருந்து விலக அவர் முடிவெடுத்துள்ளதாகத் தெரிவிக் கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் பதவிக்காலம் எதிர்வரும் நவம்பர் மாதம் 13ஆம் திகதியே முடிவடைகிறது.

எனினும் தனிப்பட்ட காரணங்களினால் முன்கூட்டியே பதவி விலகத் தீர்மானித்துள்ளதாக மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.