Header Ads



தனிமைப்படுத்தப்பட்டிருந்த 80 வயது பெண் தப்பியோட்டம்


களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.


அளுத்கம சுற்றுலா ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண் ஒருவர், நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தப்பி சென்றுள்ளார் என வைத்தியசாலை இயக்குனர் விசேட வைத்தியர் தெரிவித்துள்ளார்.


அவுஸ்திரேலியாவில் இருந்து நாட்டிற்கு வந்த கேகாலை பிரதேசத்தை சேர்ந்த 80 வயதான ஏ.ஏக்கநாயக்க என்ற 80 வயதான பெண்ணே இவ்வாறு சென்றுள்ளார். அவர் அளுத்கம, மொரகல்லே, ஈடன் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் வைத்தியசாலையில் இருந்து தப்பி சென்றுள்ளார்.


குறித்த பெண் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த போது மனநோயினால் பாதிக்கப்பட்டிருந்தமையினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.


இந்நிலையில் நேற்று காலை 7.30 மணியளவில் தாதி மருந்து வழங்குவதற்கு அவரை தேடும் போது அவர் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக உறுதியாகியுள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


அவருக்கு பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இதுவரையில் கொரோனா உறுதியாகவில்லை எனவும் கொரோனா என சந்தேகிக்கும் நிலையும் உறுதியாகவில்லை என வைத்தியசாலை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.