Header Ads



குவைத், அரபு எமிரேட்ஸ், கட்டார் நாடுகளிலிருந்து 745 இலங்கையர்கள் திரும்பினர்

குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கட்டார் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து மொத்தமாக 745 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

அதன்படி கட்டார், டோஹாவிலிருந்து கட்டார் ஏயர்வேஸ் விமான சேவைக்கு சொந்தமான QR-668 என்ற விமானத்தின் மூலம் 20 இலங்கையர்கள் அதிகாலை 1.31 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இந்தியாவின், சென்னையிலிருந்து இலங்கை ஏயர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான யு.எல் -1126 என்ற விமானத்தில் 290 இலங்கையர்கள் அதிகாலை 5.08 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

குவைத்திலிருந்து இலங்கை ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான யு.எல் -230 என்ற விமானத்தில் 266 இலங்கையர்கள் அதிகாலை 4.22 மணியளவில் மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து இலங்கை ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான  யு.எல் -226 என்ற விமானத்தில் 169 இலங்கையர்கள் மத்தள விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். 

இவ்வாறு நாட்டை வந்தடைந்த அனைவரிடமும் பி.சி.ஆர்.சோதனை முன்னெடுக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

No comments

Powered by Blogger.