ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 280 பேரும், கட்டாரிலிருந்து 42 பேரும் வருகை (வீடியோ இணைப்பு)
டி.கே.ஜி கபில
டுபாய் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளில் தொழில் புரிந்த 322 இலங்கையர்கள் இன்று (30) அதிகாலை கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தனர்.
இதற்கமைய டுபாயிலிருந்து இன்று அதிகாலை 1.30 மணிக்கு 8 பேரும், 5.05 மணியளவில் 272 பேரும் நாட்டை வந்தடைந்துள்ளதுடன், இன்று அதிகாலை 1.45 மணியளவில் கட்டாரிலிருந்து 42 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இவ்வாறு வருகை தந்த விமான பயணிகள் அனைவரும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதை தொடர்ந்து, தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
https://www.youtube.com/watch?time_continue=68&v=6zmxSPbkf8I&feature=emb_logo
Post a Comment